Skip to main content

Posts

Showing posts from March, 2021

44வது கவிதை நேசிக்கும் நிகழ்ச்சி 27.03.2021 அன்று வெள்ளிக்விழûமை - மொழிப்பெயர்ப்புக் கவிதை வாசிப்பு நிகழ்ச்சியின் ஒளிபரப்பு.

 அழகியசிங்கர் சூம் மூலமாக விருட்சம் பெருமையுடன் வழங்கும் 44வது  கவிதை நேசிக்கும் நிகழ்ச்சி சனிக்கிழமை மாலை 6.30மணிக்கு 27.03.2021 சிறப்பாக நடந்து முடிந்தது.  

சுமை கால் பணம்...சுமை கூலி முக்கால் பணம்

துளி - 180 அழகியசிங்கர் என் விஷயத்தில் இப்படித்தான் நடந்து விட்டது.  நவீன விருட்சம் 115-116 இதழ் 106 பக்கங்கள்.  அதன் எடை 136 கிராம். வந்தது வம்பு.  ஒரு இதழை ஒருவருக்கு அனுப்ப ரூ.9   ஸ்டாம்ப்   ஒட்ட வேண்டும். நான் சமீபத்தில் பத்திரிகை அனுப்புவதற்கு இரண்டு ரூபாய்   ஸ்டாம்ப்   ஒட்டியதை மாற்றி   நாலு   ரூபாய்   ஸ்டாம்ப்   வைத்து அனுப்பிக் கொண்டிருந்தேன்.  அதுவும் 100 கிராமிற்குள் இருந்ததால். சனிக்கிழமை  தபால்   அலுவலகத்தில்   உள்ள அதிகாரி   போனில்   கூப்பிட்டுப் பேசினார்.                  "உங்கள் பத்திரிகை அனுப்புவதற்கு ரூ.9க்கு   ஸ்டாம்ப்   ஒட்ட வேண்டு"மென்றார்.  பெரிய அதிர்ச்சியைக் கொடுத்தார்.  இந்தப் புத்தகத்தின் எடை100 கிராமிற்குள் இருந்திருந்தால் ரூ.4 தபால் தலை ஒட்டியிருக்கலாம்.  இன்னும் சில பக்கங்களைக் குறைத்திருந்தால் இன்னும் கொஞ்சம் தயாரிப்பு விலையையும் குறைத்திருக்கலாம். விளம்பரமில்லாமல் ஒரு பத்திரிகையைக் கொண்டு வரும்போது கட்டாயம் 100 கிராமிற்குள் பக்கங்கள் குறைவாகத்தான் திட்டமிட வேண்டும். 116 பக்கங்கள் உள்ள புத்தகமாகக் கொண்டு வந்தால் கட்டாயம் 125 ரூபாய்க்

ஒரு கதை ஒரு கருத்து

தி.ஜானகிராமனின் பாயசம் அழகியசிங்கர் ‘பாயசம்’ என்ற கதையைப் படித்தேன். சாமநாது என்பவரின் மன வக்கிரம்தான் இந்தக் கதை. சிறப்பாக எழுதி உள்ளார் தி.ஜானகிராமன். ஆரம்பிக்கும்போதே தி.ஜானகிராமன் இப்படிக் குறிப்பிடுகிறார். ‘சாமநாது அரசமரத்தடி மேடை முன்னால் நின்றார். கல்லுப் பிள்ளையாரைப் பார்த்தார். நெற்றி முகட்டில் குட்டிக் கொண்டார். தோப்புக்கரணம் என்று காதைப் பிடித்துக்கொண்டு லேசாக உடம்பை மேலும் கீழும் இழுத்துக்கொண்டார்.’ இதையெல்லாம் செய்துகொண்டு வரும் தன் மனதில் வக்கிரத்தை வளர்த்துக்கொண்டு வருகிறார். தன் அண்ணன் பையன் சுப்பராயன் பேரில் அவருக்கு அவ்வளவு ஆத்திரம். இந்தக் கதை முழுவதும் அதை வெளிப்படுத்துவதுதான். சாமநாது தன்னையும் தன் அண்ணன் பையன் சுப்பராயனையும் ஒப்பிட்டு மனத்திற்குள்ளே நடத்துகிற நாடகம்தான் இந்தக் கதை. யாரோ சொல்வதுபோல் மனசாட்சி குரலாக ஒலிக்கிறது. உதாரணமாக, ‘நீ என்ன சுப்பராயன் மாதிரி நித்யகண்டம் பூர்ண ஆயுசா? சுப்பராயன் மாதிரி மூட்டு வியாதியா, ப்ளட் ப்ரஷரா, மண்டைக் கிறுகிறுப்பா உனக

விருட்சம் நடத்தும் 44வது கவிதை நேசிக்கும் நிகழ்ச்சி

அழகியசிங்கர்  சூம்  மூலமாக விருட்சம் பெருமையுடன் வழங்கும் 44வது  கவிதை நேசிக்கும் நிகழ்ச்சி வருகிற சனிக்கிழமை மாலை 6.30மணிக்கு 27.03.2021 அன்று  நடைபெற உள்ளது.   இந்த முறை மொழிபெயர்ப்பு கவிதைகளை வாசிக்க உங்களை அழைக்கிறேன்.  தமிழில் ஏகப்பட்ட மொழிபெயர்ப்பு கவிதைகள் வந்த வண்ணம் உள்ளன. இது  மாதிரியான  கவிதைகளை வாசிப்பது நம்முடைய  கவிதை  பற்றிய அறிவை மேன்மைப் படுத்தும்.  எல்லோரையும் அழைக்கிறேன். புதிதாக இந்தக் குழுவில் வாசிக்க வருபவர்கள் தங்கள் கவிதைகளை வாசிக்கலாம்.   Topic: Time: Mar 27, 2021 06:30 PM India Join Zoom Meeting விருட்சம் நடத்தும் 44வது கவிதை நேசிக்கும் நிகழ்ச்சி https://us02web.zoom.us/j/85119514056... Meeting ID: 851 1951 4056 Passcode: 505746

43வது கவிதை நேசிக்கும் நிகழ்ச்சி - ஒளிபரப்பு - 20.93.2021 அன்று நடைபெற்றது

அழகியசிங்கர் சூம்  மூலமாக விருட்சம் பெருமையுடன் வழங்கும் 43வது  கவிதை நேசிக்கும் நிகழ்ச்சி சனிக்கிழமை மாலை 6.30மணிக்கு 20..03.2021 அன்று நடை பெற்றது. கவிதை வாசிப்பவர்கள் மற்ற கவிஞர்களின் கவிதைகளை வாசித்தார்கள்.  வித்தியாசமான கூட்டமாக இருந்தது.

ஒரு கதை ஒரு கருத்து – சுப்ரமண்யராஜுவின் நாளை வரும் கதை

அ ழகியசிங்கர் எண்பதுகளில் முக்கியமான எழுத்தாளர் சுப்ரமண்யராஜு கிட்டத்தட்ட 100 கதைகள் எழுதியிருப்பார். இன்னும் பிரசுரமாக வேண்டிய கதைகள் இருப்பதாக இலக்கிய நண்பர் ஒருவர் சொல்கிறார். சுப்ரமண்ய ராஜ÷ கதைகள் என்று கிழக்குப் பதிப்பகம் வெளியிட்ட புத்தகத்தில் 32 கதைகள் தொகுக்கப்பட்டிருக்கிறது. அதில் இரண்டு குறுநாவல்கள். பொதுவாக எல்லாக் கதைகளையும் கச்சிதமாக ஆரம்பித்து கதைகளைச் சுலபமாக முடிக்கிறார் சுப்ரமண்யராஜு. அதில் நான் எடுத்துக்கொண்டு எழுத உள்ள கதை நாளை வரும் என்ற கதை. அம்மா வீட்டிற்கு ஊருக்குப் போக விரும்புகிறாள் சுமதி. அம்மாவைப் பார்க்க சுமதியின் அக்காவும் சில நாட்கள் தங்க அந்த ஊருக்கு வருகிறாள். அக்காவைச் சந்திக்காமல் விட்டால் சந்திப்பது 2 மூன்று வருடம் ஆகிவிடும். ஊருக்குக் கிளம்புவதற்கு முன் முதல் நாள் தூக்கம் வராமல் படுத்துக்கொண்டிருக்கிறாள் சுமதி. கணவனை எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறாள். கண்ணை மூடி அரைத் தூக்கத்திலிருந்தபோது ஏதோ சத்தம் கேட்க விழித்துக் கொள்கிறாள். நேரம் பார்க்கிறாள். மணி பத்து நாற்பது. அவள் கணவன் தியாகராஜன் வரவில்லை. இரவி

விருட்சம் நடத்தும் சூம் மூலம் கதை வாசிக்கும் ஏழாவது கூட்டம்

அழகியசிங்கர் வணக்கம். இது ஏழாவது கூட்டம். 19.03.2021 (வெள்ளிக்கிழமை)  சுப்ரமண்ய  ராஜ÷ கதைகள் குறித்து ஏழாவது கூட்டம்.  15 பேர்கள் கதைகளை வாசித்தார்கள்.  அதன்  ஒளிப்பதிவைக்  கேட்டு மகிழுங்கள். 

இன்று உலக கவிஞர்களின் தினம்

துளி - 179 அழகியசிங்கர் ஒவ்வொருவருக்கும் கவிதை எழுத உந்துதல் வேண்டும்.  எனக்கு வள்ளலார்தான் கவிதை எழுத உந்துதல்.  எளிமையான வரிகளைக் கொண்ட அவர் பாடல்கள் என்னைக் கவர்ந்தன.  பின் கணையாழி, தீபம்  பத்திரிகைகளைப்  படிக்கும்போது அவற்றில் பிரசுரமாகும்  கவிதைகளையும்  படிப்பேன். என்ஒன்றுவிட்ட  சகோதரர் ஆரம்பித்த  மலர்த்தும்பி  என்ற சிற் றேடில்தான்  என் கவிதைகள் முதலில் அரங்கேறின. அதற்கு முன்பே நான் கவிதைகள் எழுத ஆரம்பித்தாலும் எந்தக் கவிதையும் எந்தப் பத்திரிகையிலும் பிரசுரம் ஆகவில்லை. என் நண்பர் கவிஞர் எஸ்.வைத்தியநாதன் மூலம் ஞானக்கூத்தன், ஆர். ராஜகோபாலன் .  ரா. ஸ்ரீனிவாஸன் , வைத்தியநாதன், ஆனந்த், காளி- தாஸ் , ஆத்மாநாம்  போன்ற நண்பர்கள் நட்பு  கிடைத்த  பிறகு, நான் எழுதிக்  கொண்டிருந்த   கவிதைத் தன்மை மாறி விட்டது. ஆத்மாநாம்  மறைவுக்குப் பின் ழ இதழைத் திரும்பவும் கொண்டு வர முயற்சி நடந்தது.  அதில் நானும் பங்கெடுத்துக்கொண்டேன். ஆனால் ழ பத்திரிகையைத் தொடர்ந்து கொண்டு வர முடியவில்லை. எனக்குக் கவிதை போதை ஏறியதால் நான் விருட்சம் பத்திரிகையை ஆரம்பித்தேன்.  கடந்த 35  ஆண்டுகளாகக்  கொண்டு வரும்

43வது கவிதை நேசிக்கும் நிகழ்ச்சி

அழகியசிங்கர் சூம் மூலமாக விருட்சம் பெருமையுடன் வழங்கும் 43வது கவிதை நேசிக்கும் நிகழ்ச்சி வருகிற சனிக்கிழமை மாலை 6.30மணிக்கு 20..03.2021 அன்று நடைபெற உள்ளது. கவிதை வாசிப்பவர்கள் மற்ற கவிஞர்களின் கவிதைகளை வாசிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன். எல்லாக் கவிஞர்களையும் நாம் மதிக்கிறோம் என்பதற்கு அடையாளமாக நாம் மற்ற கவிஞர்களின் கவிதைகளை வாசிக்க வேண்டும். புதிதாக இந்தக் குழுவில் வாசிக்க வருபவர்கள் தங்கள் கவிதைகளை வாசிக்கலாம். கூட்ட அறிவிப்பு.விபரம் Topic: Virutcham Poetry Nesikkum Zoom Meeting Time: Mar 20, 2021 06:30 PM India Join Zoom Meeting https://us02web.zoom.us/j/84826741526... Meeting ID: 848 2674 1526 Passcode: 653944

சூம் மூலம் கதை வாசிக்கும் கூட்டம்

  அழகியசிங்கர் வணக்கம். இது ஏழாவது கூட்டம். வரும் வெள்ளிக்கிழமை - 19.03.2021 - 6.30 மணிக்கு நடைபெற உள்ளது. எல்லோரும் கலந்து கொண்டு சிறப்பு செய்யவும். போன மாதம் மா.அரங்கநாதன் கதைகளுக்குக் கூட்டம் நடத்தினோம். இந்த முறை சுப்ரமண்ய ராஜ÷ கதைகள். கீழ்க்கண்ட நண்பர்கள் சுப்ரமண்ய ராஜ÷ கதைகள் குறித்துப் பேச உள்ளார்கள். கதைகள் 1. கிருபானந்தன் - நாக்கு 2. வ.வே.சு மீண்டும் ஓர் ஆரம்பம் 3. டாக்டர் பாஸ்கரன் நடுவிலே நான் 4. கலாவதி பாஸ்கரன் உறவு 5. சதூர்புஜன் இருட்டில் நின்ற 6. கிரிஜா சதுர்புஜன் தனிமை 7. ராய செல்லப்பா இன்னொரு கனவு 8. ராஜன் பாபு காணாமல்

கவிதையும் ரசனையும் – 13

அழகியசிங்கர் சமீபத்தில் நகுலனைப் பற்றி பேச்சு வந்தது. நகுலன் சிறுகதை, கவிதை, நாவல், கட்டுரை என்று எழுதியிருக்கிறார். மிகக் குறைவான வாசகர்களுக்காகவே அவர் எழுதியிருக்கிறார். 1987ஆம் ஆண்டு வெளிவந்த ‘சுருதி’ என்ற புத்தகத்தின் பிரதி ஒன்று கிடைத்தது. இத் தொகுதியில் கடைசியில் இக் கவிதைத் தொகுதி பற்றி நகுலன் இவ்வாறு எழுதியிருக்கிறார். ‘சமீபத்தில் எனக்கு நேர்ந்த ஒரு அனுபவம் காரணமாகக் கவிதை, கதை, நாவல் இவைகளை எழுதுவது முக்கியமன்றி, அவைகளைப் பிரசுரிக்க வேண்டிய அவசியமில்லை என்று முடிவுக்கு வந்தேன்’ என்று எழுதியிருக்கிறார். அவருக்கு என்ன அனுபவம் கிடைத்தது அவர் அப்படி நினைத்தார் என்று தெளிவாகக் குறிப்பிடவில்லை. 36 கவிதைகள் கொண்ட தொகுப்பை தாரணி பதிப்பகத்தின் ஸ்தாபகர் நகுலன் கவிதைகளைப் பிரசுர்த்துள்ளார். இன்னொன்றையும் குறிப்பிடுகிறார் நகுலன். ‘ எனக்கு வரும் கடிதங்களிலிருந்து என் கவிதைகளுக்குத் தரமான வாசகர்கள் இருக்கிறார்கள் என்பது மாத்திரமில்லை (இவர்களை எனக்கு முன்பின் தெரியாது), இவர்களில் சிலர் நல்ல கவிஞர்கள் என்பதையும் – பரவலாக அவர்கள்