Skip to main content

Posts

Showing posts from January, 2016

பாஜிராவ் மஸ்தானி

பிரபு மயிலாடுதுறை சில ஆண்டுகளுக்கு முன்னால், மயிலாடுதுறையிலிருந்து சென்னைக்கு பேருந்தில் பகல் நேரத்தில் பயணம் செய்து கொண்டிருந்தேன்.  அது செல்ஃபோன் பிரபலமாகிக் கொண்டிருந்த காலம்.  நான் பேருந்தின் கடைசி வரிசைக்கு முன்னால் இருந்த இடதுபக்க இருக்கையில் ஜன்னல் ஓரத்தில் அமர்ந்திருந்தேன்.  புதுச்சேரி பேருந்து நிலையத்தில் ஓர் இளைஞன்  ஏறினான்.  கடைசி வரிசையின் நடுவில் இருந்த இருக்கையில் அமர்ந்து கொண்டான்.  அவனது தோற்றம், கைப்பை, காலணிகள் மற்றும் அவன் கையிலிருந்த புத்தகங்கள் இவற்றைக்கொண்டு அவன் பொறியியல் மாணவனாக இருக்கக் கூடும் என கணித்தேன்.  பேருந்து கிழக்கு கடற்கரை சாலையில் சென்ற போது இரண்டு கல்லூரி மாணவிகள் புதுச்சேரி பொறியியல் கல்லூரி அருகே ஏறினர்.  கடைசி வரிசையில் மட்டுமே இடம் இருந்தது.  அம்மாணவனுக்கு அருகே அமர்ந்து கொண்டனர்.  ஒரே வகுப்பில் படிப்பவர்களாக இருக்கக் கூடும்!   புதுச்சேரியிலிருந்து சென்னை வரை உரையாடிய வண்ணம் இருந்தனர்.  ஒரு பெண் அவ்வப்போது தூங்கி எழுந்து உரையாடலில் இணைத்து கொண்டாள்.  அவள் உரையாடும் போது இன்னொரு பெண் தூங்கினாள்.  மோட்டலில் வண்டி நின்ற போது அம்மாணவன் தான

அங்கும் இங்கும்........

அழகியசிங்கர் பத்மஸ்ரீ விருதை தவிர்ப்பதாக ஜெயமோகன் ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தார்.  இதைக் காரணமாக வைத்துக்கொண்டு சிலர் ஜெயமோகனை தாக்கியும் இன்னும் சிலர் அவரை வாழ்த்தியும் வலைதளத்தில் தங்கள் கருத்துகளை எழுதி உள்ளார்கள்.  இந்தப் பரிசை ஏற்பதால் அவருக்கு என்ன அவமதிப்புகளும், புறகணிப்புகளும் உருவாகும் என்பதை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை.   இதனால் ஜெயமோகனுக்கு எதிர்காலத்தில் யாரும் பரிசு தர யோஜனை செய்வார்கள்.  ஒரு பரிசு என்பது ஒருசிலரின் முயற்சியால்தான் கிடைக்கிறது.  இதை யாரும் பெறுவதற்கு பெரிய சிபாரிசு செய்யக் கூடாது.  அது தானாகவே கிடைக்க வேண்டும். இல்லாவிட்டால் விட்டுவிட வேண்டும. ஜெயமோகனுக்கு இந்த விருது தானாகவே கிடைத்துள்ளது.  அதற்கு ஏன் வேண்டாம் என்று அவர் மறுக்கிறார் என்பது புரியவில்லை.  ஜெயமோகனுக்கு இந்த விருதை இந்த அரசு கொடுக்கவில்லை என்றால் வேற யார் பின்னால் அவருக்குக் கொடுப்பார்கள் என்பது கேள்விக்குறியே? 'இந்து மெய்யியல்மேல் எனக்கிருக்கும் அழுத்தமான நம்பிக்கையை முன்வைத்தே எழுதி வருகிறேன்,' என்று குறிப்பிடுகிறார்.  அப்படியிருக்கும்போது இந்த விருதை வ

மறந்து போன பக்கங்கள்....

அழகியசிங்கர் தி சோ வேணுகோபாலன் கோடை வயல் என்கிற தன் கவிதைத் தொகுதியை ந பிச்சமூர்த்திக்கு சமர்ப்பணம் செய்துள்ளார். அப்போது அவர் எழுதிய வரிகள் : 'என் கவிதையின் புதுக்குரலுக்கு பிரசவம் பார்த்த மருத்துவர் திரு ந. பிச்சமூர்த்தி அவர்களின் அடிக்கமலங்களுக்கு' ஒரு கவிதையைப் படிக்கும்போது ஒருமுறைக்கு இரண்டு முறை படிக்க வேண்டும்.  அப்படிப் படிக்கும்போது கவிதை படிப்பவர் நோக்கி கவிதை மெதுவாக நகர்ந்து வரும்.  வெள்ளம் பற்றி எழுதிய தி சோ வேணுகோபாலன் üவெள்ளம் சிவமதமா?ý என்கிறார்.  வெள்ளத்தைப் பற்றி சொல்ல வருகிறார் என்று நினைத்தாலும், சிவமதமா என்று ஏன் சொல்கிறார். இதற்குக் காரணம் எதாவது யாருக்காவது தெரியுமா? கடைசியில் கவிதையை முடிக்கும்போது வெள்ளம் சிவமதமா? இல்லை சிவன்மதமா? என்று முடிக்கிறார்.  இரண்டு வார்த்தைக்கும் உள்ள வித்தியாசம் என்ன? புரியவில்லை.  வெள்ளம் வழியாடிக் கரைசாடி விம்மிப் புடைத்துறுமி வருகின்ற வெள்ளம் சிவமதமா? இல்லை வெறுந்துயரா? தாளம் தவறியதா? கோளின் கதிபிசகா? தாளம் தவறியதால் கோளில் கதிபிசகால் மேலே பனிமுடி

புத்தக விமர்சனம் 15

அழகியசிங்கர் சாகித்திய அகாதெமி விருது பெற்ற வங்க நாவல் அனுபவங்கள்.  இந்த நாவலை எழுதியவர் திவ்யேந்து பாலித்.  தமிழில் மொழி பெயர்த்தவர் புவனா நடராஜன்.   திருமதி புவனா நடராஜன், 2009ம் ஆண்டில் மொழிபெயர்ப்புக்கான 'சாகித்திய அகாதெமி விருது' பெற்றவர்.  நல்லி திசை எட்டும் விருதையும் 2007ம் ஆண்டு பெற்றுள்ளார்.  22 மொழி பெயர்ப்பு நூல்களுக்கு ஆசிரியர் அவர்.   திவ்யேநது பாலித்தின் நாவலான அனுபவ் என்ற நாவல்தான் அனுபவங்கள் என்று தமிழில் மொழி பெயர்த்துள்ளார்கள். பொதுவாக மொழிபெயர்ப்பில் உள்ள ஒரு படைப்பைப் படிக்கும்போது, அதன் மூல மொழியின் உணர்வை நிச்சயமாகப் பெற முடியாது.  ஆனாலும் மூல மொழியில் உள்ள ஒரு படைப்பை ஓரளவாவது நம்மால் உணர முடியும்.  இந்த நாவலைப் படிக்கும்போது இது ஒரு வங்க நாவல் என்ற ஒன்றை  தமிழில்தான்  படிக்கிறோம் என்று தோன்றியது.   வங்க மொழியில் ஒரு நாவல் எப்படி எழுதப் படுகிறது என்பதை அறிய ஆவலாக இருந்தேன்.  வித்தியாசமாக எழுதப்பட்ட நாவல்.  220 பக்கங்கள் கொண்ட  நாவல் மிக எளிதாக எழுதப்பட்டுள்ளது. ஆத்ரேயி என்ற பெண்ணின் ஒத்தக் குரலாக  நாவல் எழுதப்பட்டுள்ளது.  முதல் பக்க

மறந்து போன பக்கங்கள்...2

அழகியசிங்கர் தி சோ வேணுகோபாலனின் கோடை வயல் தொகுப்பில் உள்ள இரண்டாவது கவிதை இது.  இத் தொகுதியில் மொத்தம் 29 கவிதைகள் உள்ளன.  ஒவ்வொரு கவிதையாகக் கொண்டு வர எண்ணத்தில் உள்ளேன். படித்து உங்கள் கருத்துகளை தெரிவிக்க வேண்டுகிறேன். நான் கவியானேன் முகக் கண்ணாடியில் முனைந்து பார்த்தேன். கண்களில் கவனமாய் கவிஞனைத் தேடினேன். புருவ மத்தியில் புலப்படவில்லை சிந்தனைக் கொக்கி சுருங்கிடும் நெற்றியில் கோடுகட் கிடையில் தேடினேன்:  கண்டிலன். நாசியின் நீளம் சிந்தனைக் கறிகுறி என்றனர்: அளந்தேன். அளவிலும் தோல்வியே! என்ன தெரிந்தது? நானும் மக்களின் தொகுதியில் ஒருவனாய் பேதம் தவிர்த்துக் கலந்து நிற்பதே! கவிதை பின் எப்படிக் கனன்றுயிர்க் கின்றது? காகிதம் எடுத்து வேண்டுமென் றெழுத விரும்பினாலும் வராத வித்தையை எங்ஙனம் விளைவித்தேன் நான்? என்னுளே ஏதோ குமுறிச் சிரித்தது: பித்தோ ? வெறியோ? எழுத்திலே வேகம் ஏறித் துடித்தது: நான் எதற்கெழுதினேன்? என்செயல் இதிலே எதுவும் இல்லை. ஏனெனில் எனக்கே புரிந்திட வில்லை!

மறதி என்கிற பிசாசு....

அழகியசிங்கர் நேற்று காலையில் எழுந்தவுடன் கீழே போய் தண்ணீர் போட வேண்டும் என்று மாடிப்படிக்கட்டுகளில் இறங்கினேன்.  சின்ன கேட் திறந்திருந்தது. யாரோ சின்ன கேட்டைத் திறந்து வைத்து விட்டுப் போய்விட்டார்கள் என்று நினைத்தபடி படிக்கட்டுகளைத் தாண்டியபடி வந்தேன்.  கீழ் படியைத் தாண்டிவிட்டேன் என்று நினைத்து காலை வைத்தேன். தடாரென்று கீழே விழுந்தேன்.  முட்டியில் சிராய்ப்பு.  ஒரு நிமிடம் விழுந்த வாக்கில் இருந்தேன். அபபோதுதான் ஏன் இப்படி மறந்து போய் காலை வைத்தேன் என்று யோசிக்க ஆரமபித்தேன்.   மறதி மன்னன் என்று யாருக்காவது பட்டம் கொடுக்க நினைத்தால் எனக்குக் கொடுக்கலாம்.  அவ்வளவு மறதிக்காரன்.  காலம் காலமாக இந்த மறதியுடன் போராடிக் கொண்டிருக்கிறேன்.   எங்கள் அலுவலகத்தில் டௌட் வெங்கட்ராமன் என்ற ஒருவர் உண்டு. பலரும் அவரை டௌட் வெங்கட்ராமன் என்று சொல்லும்போது ஏன் அப்படி குறிப்பிடுகிறார்கள் என்று சொன்னவர்களைக் கேட்டேன். ''அலுவலகக் கதவுகளை எல்லாம் பூட்டிவிட்டு வெளியில் வந்து விடுவார்.  அவருக்கு திடீரென்று சந்தேகம் வந்துவிடும்.  உடனே கதவு அருகே போய்விட்டு பூட்டை இழுத்துப் பார்ப்பார்

துரத்தும் கட்அவுட்டுகள்...

அழகியசிங்கர்  இன்று தை வெள்ளிக்கிழமை.  மனைவி காலையில் வெற்றிலைப் பாக்கு வாங்கிக் கொண்டு வரச் சொன்னாள்.  ஏன் நேற்றே சொல்லவில்லை என்று கோபித்துக்கொண்டேன்.  பூஜை செய்வதற்கு வெற்றிலை வேண்டுமென்ற எண்ணம் காலையில்தான் அவளிடம் உதித்தது.  எங்கள் தெரு முனையில் உள்ள கடையில் வெற்றிலை கிடைத்துவிடும். சட்டையை மாட்டிக்கொண்டு செருப்பை மாட்டிக்கொண்டு கிளம்பினேன்.  நான் போட்டிருக்கும் செருப்பை கொண்டு ரொம்ப தூரம் நடப்பது எனக்கு சிரமமாக இருக்கும்.  எப்படியோ  முனைக் கடைக்குச் சென்றேன்.  வெற்றிலை என்று கேட்டேன்.  கடைக்காரர் இல்லை என்று கை விரித்துவிட்டார்.  பின் எங்கே கிடைக்கும் என்று கேட்டேன்.  இந்தத் தெருவில் முனையில் ஒரு கடை இருக்கிறது.  அங்கே போங்கள் என்றார்.  நானும் வேண்டா வெறுப்பாக நடந்தேன். அதிசயமாய் மழை தூற ஆரம்பித்தது.  ஐய்யயோ என்று மனம்பதைத்தது.  இந்த வெள்ளம் வந்த நாளிலிருந்து துணி காயப் போடுவதபோல் மாடியில் புத்தகக் கட்டை காயப் போட்டுக் கொண்டிருக்கிறேன்.  அதில் என் கவிதைப் புததகக் கட்டு, வினோதமான பறவை என்ற பெயர்.  அதெல்லாம் வெள்ளத்தில் நனைந்து விட்டது.  வேற வழியில்லை, உடனே வெற்

மறந்து போன பக்கங்கள்....

அழகியசிங்கர் தி சோ வேணுகோபாலன் என்ற கவிஞரின் கோடை வயல் என்ற கவிதைத்தொகுதி எழுத்து பிரசுரமாக 1965ஆம் ஆண்டு பிரசுரமானது.  7.11.1929ல் பிறந்த வேணுகோபாலன் பற்றிய செய்தி எதுவும் தெரியவில்லை.  இப்படி காணாமல் போன படைப்பாளிகள் தமிழில் அதிகம்.  இவற்றை  மறந்து  போன பக்கங்கள் என்ற பெயரில் கொண்டு வர உத்தேசம்.  அவ்வப்போது கொஞ்சங் கொஞ்சமாக இவருடைய கவிதைகளைக் கொண்டு வர உள்ளேன். இதேபோல் இன்னும் பலரையும் கொண்டு வர உள்ளேன். 1959ல் எழுத்துவில் கவிதை எழுத ஆரம்பித்தார்.  கோடை வயல் என்ற தொகுப்பிற்கு வைதீஸ்வரன் என்ற கவிஞர் அட்டைப் படம் தந்துள்ளார். சின்னஞ் சிறிய திரி. எண்ணெய் முழுகியது. சூடு நெருப்பாச்சு. காணும் ஒளியாச்சு. கண்ணில் பிடிபடலாம். கையில் பிடிபடுமா? தத்துவமா? தெரியாது. போகட்டும். சின்னஞ்சிறு விட்டில். சன்னச் சிறகாலே புயலைச் சூல்கொண்ட காற்றைக் கிழித்தது. எப்படி? தெரியாது. போகட்டும். ஒளிமோகம் கொண்டது களிகொண்ட விட்டில். காற்றைச் சிறகின்மேல் ஏற்றிச் சுழன்றது. வட்டம் குறுகியது சொட்டாமல்த் திரிநுனியில் நிற்கும் ஒளித்திவலை, 'மெய்' தீண்டும் க

புத்தக விமர்சனம் 14

அழகியசிங்கர் சமீபத்தில் நினைவோடை என்ற பெயரில் சுந்தர ராமசாமி அவர்களுடைய புத்தகம் படித்தேன்.  இந்தப் பெயரில் க நா சு வைப் பற்றி அவர் எழுதிய புத்தகத்தைத்தான் படித்து முடித்தேன்.  சுந்தர ராமசாமி பேசியதை அரவிந்தன் அவர்கள் பதிவு செய்து அதை ஒரு அற்புதமான புத்தகமாகக் கொண்டு வந்துள்ளார்.  இந்தப் புத்தகம் படிக்கும்போது நேரிடையாகவே சுந்தரராமசாமி க நா சுவைப் பற்றி சொல்வதுபோல் இருக்கிறது. 2003ஆம் ஆண்டு வெளிவந்த புததகம் இது. இந்தப் புத்தகத்தில் இன்னொரு ஆச்சரியம்.  அரவிந்தன் ரொம்ப கேள்விகளைக் கேட்டு சுந்தர ராமசாமியை தொந்தரவு செய்யவில்லை. உண்மையில் சு ரா தான் க நா சுவைப் பற்றி தனக்குத் தோன்றியதையெல்லாம் பேசிக் கொண்டே போகிறார். 100 பக்கங்களுக்கு மேல் இந்தப் புத்தகம் போய்க் கொண்டிருக்கிறது. இந்தத் தலைப்பில் பல புத்தகங்கள் வந்த சமயத்தில் நான் சிலரைப் பற்றி சுரா எழுதியதைப் படித்திருக்கிறேன்.  இன்னும் இரண்டு புத்தகங்களான பிரமிள் பற்றி சுரா எழுதியது, கிருஷ்ணன் நம்பியைப் பற்றி அவர் சொல்ல சொல்ல எழுதிய புத்தகங்களை முன்பே  படித்திருக்கிறேன்.  இப் புத்தகத்தைப் படித்து முடித்தவுடன் எனக

என் பூனைகள் - சார்லஸ் புக்கோவ்ஸ்கி

தமிழாக்கம்:   ராமலக்ஷ்மி அ றிவேன். நான் அறிவேன். வரையறுக்கப்பட்ட அவைகளை, அவற்றின் வேறுபட்ட தேவைகளை  மற்றும்  கவலைகளை. ஆயினும் அவற்றைக் கவனித்து அவற்றிடமிருந்து கற்றுக் கொள்கிறேன். சிறிதளவே அவை தெரிந்து வைத்திருப்பது எனக்குப் பிடிக்கிறது,  அவை அறிந்தவை மிக ஆழமானவை. அவை முறையிடும்  ஆனால் கவலைப் படுவதில்லை. ஆச்சரியமூட்டும் மிடுக்குடன் அவை நடை போடும். நேரடியான எளிமையுடன் அவை உறங்கி விடுவது மனிதர்களால் புரிந்து கொள்ளவே முடியாத ஒன்று. அவற்றின் கண்கள் நம் கண்களை விட மிக அழகானவை. தயக்கமோ  உறுத்தலோ இன்றி ஒரு நாளில் இருபது மணி நேரத்திற்கு உறங்கக் கூடியவை. எப்போதெல்லாம் சோர்வாக உணருகிறேனோ அப்போதெல்லாம் நான் செய்ய வேண்டியது என் பூனைகளைக் கவனிப்பதுதான். என் தைரியம் திரும்பி வந்து விடுகிறது. இந்தப் பிராணிகளை ஆராய்ச்சி செய்கிறேன். அவை என்னுடைய ஆசான்கள். *

13வது சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் ரசித்தப் படங்கள்

அழகியசிங்கர் ஒரு வழியாக 13வது சர்வதேச திரைப்பட விழா  13.01.2015 அன்று  முடிவடைந்துள்ளது.  6ஆம் தேதியிலிருந்து 13ம் தேதி வரை 12 படங்கள் பார்த்துவிட்டேன். உட்லன்ட் தியேட்டரில் ஐந்து படங்களும், உடலன்ட் சிம்போனியில் 3 படமும், ஆர்கேவியில் 3 படங்களும், ஐநக்ஸில் 1 படமும் பார்த்து முடித்துவிட்டேன்.  ஒரு நாளில் இரண்டு படங்கள் பார்ப்பது எனக்கு இயலாது மாதிரியே தோன்றியது.   ஒவ்வொரு தியேட்டரிலும் கூட்டம் அதிகம்.  சிலசமயம் தாமதமாக வந்தால் உட்கார இடத்தைக் கண்டுபிடிக்க சற்று சிரமமாக இருக்கும்.  படம் பார்த்துக்கொண்டிருக்கும்போது சிலபேர்கள் படத்தை முழுதாகப் பார்க்காமல் தியேட்டரை விட்டுப் போய்க் கொண்டிருப்பார்கள்.  ஒரே இடத்தில் உட்கார்ந்து அசையாமல் தலையைத் தூக்கி வைத்துக் கொண்டு பார்க்கிற அனுபவத்தில் எனக்கு இடுப்பு வலி வந்துவிடும்.  சிறிது நேரம் வலியுடன் படம் பார்க்க வேண்டியிருக்கும்.  எப்போதும் என்னால் நெருக்கமாக ஓரிடத்தில் ரொம்ப நேரம் உட்கார முடிந்ததில்லை.  அப்புறம் தலை. அசையாமல் வைத்திருப்பதால் எழுந்திருந்து நகரும்போது ஜாக்கிரதையாக நடக்க வேண்டி உள்ளது.   மேலும் சினிமா பார

13வது சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் ரசித்தப் படங்கள்...2

அழகியசிங்கர் திரைப்படத் துவக்க விழா அன்று காட்டிய படம் விக்டோரியா என்ற படம்.  இந்தப் படம் பார்க்க ஏகப்பட்ட கூட்டம்.  நான் சற்று தாமதமாகச் சென்றதால் முண்டி அடித்துக்கொண்டு போக வேண்டி உள்ளது.  உள்ளே விட முடியாது என்று சொல்லி விட்டார்கள். பின் ஒரு தள்ளு தள்ளி உள்ளே சென்றேன். ஏற்கனவே சுந்தர்ராஜன் அவர்களிடம் சொன்னதால் அவர் இடம் பிடித்து வைத்திருந்தார். மிக எளிமையாக துவக்க விழா நடந்தது.  யாரும் பெரிய வார்த்தைகளையே பேசவில்லை.  மேலும் படம் ஆரம்பிக்க வேண்டுமென்பதால் கொஞ்சமாகப் பேசினார்கள் என்று நினைக்கிறேன்.  தமிழ் வாழ்த்துடன் ஆரம்பித்தது விழா.  குத்துவிளக்கு ஏற்றினார்கள்.  விக்டோரியா படம் எடுத்தவரும் இந்த விழாவில் கலந்து கொண்டு அந்தப் படத்தைப் பற்றி சில வார்த்தைகள் சொன்னார். இந்த விக்டோரியா என்ற படம் பல பரிசுப் போட்டிகளில் சர்வதேச அளவில் கலந்து கொண்டுள்ளது.  பெர்லின் திரைப்பட விழாவில் வெள்ளிக்கரடி உள்ளிட்ட ஆறுவிதமான பரிசுகள் பெற்றுள்ளது. ஒளிப்பதிவாளர் சுடுர்லா பிராண்ட் கோர்விலன் தன் கேமராவில் ஒரே ஷாட்டில் படத்தை எடுத்து சாதனை பண்ணி உள்ளார்.  அதாவது ஒரு நகரம், ஒரு இரவு,