Skip to main content

நிலவும் தவளையும்




 
அலையற்ற நீர்
படுக்கையில் அயர்ந்த
தூக்கத்தில் நிலா.
நிலவிற்கு இரங்கி
நீரைத் தொடாமல்
விலகிச் செல்கிறது
காற்று.
இரவின் அமைதியில்
எங்கிருந்தோ வந்து
விழுந்த தவளையின்
துள்ளலில் வளைந்து
நெளிந்தது நிலா. 

Comments

மிக அழகான கற்பனை.
அசத்தலான கவிதை..
மதி said…
ஒரு நல்ல ஹைக்கூவைக் கொஞ்சம் நீளமான நல்ல கவிதையாக வாசித்தது போலிருந்தது.. உங்களின் நிலா சார்ந்த கவிதைகள் அனைத்தையும் ரசித்திருக்கிறேன் நண்பரே.. வாழ்த்துக்கள்

Popular posts from this blog