Skip to main content

நிலவும் குட்டி முதலைகளும்

 
சலனமற்ற இரவில்
சல்லாபமாய்
மிதந்து கொண்டிருந்தது
பிறைநிலா
அந்தப் பெரிய குளத்தில்...
குத்து வாள் போலிருந்த
அதன் கூர்பகுதிகளிரண்டிலும்
குட்டி முதலைகள் தனது
முதுகைச் சொறிந்து
கொண்டன. 

Comments