Skip to main content

தேவதையும் கோடரியும்


 
மரம் வெட்டி
தான் தொலைத்த கோடரி
வேண்டி நின்றான்
தேவதையிடம் 
தொலைத்த கோடரி தவிர
வேறெந்த உலோகக்கோடரியும்
வேண்டேன் என்றான்
அவன்
எந்தக்கோடரியும்
மரத்தை வெட்டவே பயன்படும்
ஆதலால் உனக்கு கோடரிகள்
நான் கொடுப்பதிற்கில்லை
கனி தரும் கன்றுகள்
யாம் தருவோம்
பயிர் செய்து பிழைத்துக்கொள்
என்றாள் தேவதை.
மரக்கன்றுகள் வாங்கி
அவன் சென்று விட்டான்
கொடுத்த மகிழ்வில்
தேவதையும்
மறைந்து விட்டாள்.
இப்போது என்
கையில் இருக்கிறது
அந்தக்கோடரி. 

Comments

Popular posts from this blog