Skip to main content

வருகை





பழுத்த இலைகள்
மண்ணில் உதிர்கின்றன
இன்று காலையிலேயே
வெயில் கொளுத்தத் துவங்கிவிட்டது
ரிடையர்டு ஆன பின்பு
சூரல் நாற்காலி தானே கதி
ஆளரவமற்ற வீதியில்
காற்று அலைகிறது
நேற்று நடமாடியவர்கள்
இன்று காணாமல் போகும்போது
மரணம் என்னைப் பார்த்து
பல் இளிக்கிறது
அந்தி வேளையில்
கண்களை மூடி
பறவைகளின் சப்தத்தை
கேட்கும் போது
மனம் இலேசாகிறது
தூரத்தில் யார் வருவது
இந்தக் கண்ணாடியை
எங்கே வைத்தேன்
ஓ பரந்தாமனா -
எங்கிருந்து என்று கேட்டேன்
காதோரம் வந்து சொன்னான்
கைலாயம் என்று.













Comments

Popular posts from this blog