Skip to main content

கதிரொளி


மழையில் நனைந்த பறவை
சிறகை உலர்த்தியது
மின்னல் நரம்புகள்
வானை வெளிச்சமிட்டுக்
காட்டியது
இடியோசை
ஆகாயம் இடிந்து
விழுவதைப் போல
பயங்காட்டியது
இயற்கை வரைந்த
ஏழு வண்ண ஓவியத்தை
ஜனக்கூட்டம் ரசித்தது
மரங்களின் பாஷை
பறவைக்கு புரிந்தது
வீதியில் நடப்பவர்கள்
மழைக்கெதிராய்
கறுப்புக் குடை பிடித்தார்கள்
மெல்ல பரிதி
எட்டிப் பார்த்ததும்
சகஜ நிலை திரும்பியது
அடுத்த மழைக்கு முன்னே
இரையைத் தேட எறும்பு
சாரை சாரையாய்
ஊர்ந்து சென்றது.

Comments

Popular posts from this blog