Skip to main content

பறவை நண்பன்

 

நிறம் 
இரவை எழுதும் பொழுது 
அறையில் வந்து அமர்ந்த 
பறவை ஒன்று 
என்னோடு கதைக்கத் துவங்கியிருந்தது...
அது பேசும் பேச்சிற்கு 
என்னால் தலையாட்ட முடிந்ததே தவிர 
பதில் பேச முடியவில்லை 
கொஞ்ச நேரத்தில் 
அதனோடு சேர்ந்து 
இரையைக் கொத்த தொடங்கினேன்  
நீண்ட நேரத்திற்குப் பிறகு 
என் படுக்கையையும் அது ஆக்கிரமைத்துக்கொண்டது 
மென்மையான முனகலில்
தூக்கம் சுவர்க்கம் நுழைய 
நிறம் எழுதி முடித்திருந்தது 
ஒரு பகலாக மாறிப்போயிருந்தது
பறவை வந்து தங்கிவிட்டுச் 
சென்றதற்குச் சாட்சி 
படுக்கையில் கிறுக்கப்பட்ட 
வெள்ளைக் கோடுகள் மட்டுமே...
யாருக்கும் தெரியாமல் 
அதை மறைத்தாக வேண்டும்...
                                       

Comments

Popular posts from this blog