Skip to main content

பிரயோகம்

                                                                                                                                 

பாதி தூரம்
வந்த பிறகு தான்
தெரிந்தது
அதல பாதாளம்
அதற்கு மேல்
ஒன்றுமில்லை
தலை நோவ
மண்டையிடி
எதற்குத் தண்டனையோ
உடல்
நீலம் பாரித்தது
ஈசன் கழுத்திலுள்ள
பாம்பு தீண்டிற்றோ
பேச்சு சாதுர்யத்துடன் தான்
ஆரம்பிக்கிறது
பெரும் சண்டையில் போய்
முடிகிறது
வந்த வழியை
திரும்பிப் பார்த்தால்
இவ்வழியா வந்தோம்
மூக்கைப் பிடித்துக் கொண்டு
எனத் தோன்றும்
புலால் உண்ணத் தகுந்ததல்ல
என்று புரிகிறது
என்ன செய்வது
ஆதியில் பச்சை மாமிசத்தை
புசித்தவனுக்கு
துறவி சொல்வது
எங்கு புரிகிறது
மயன் காலண்டர்
முடியப் போகிறதாம்
இதோ தோன்றப்
போகிறாராம்
வாழும் போது
தண்டணை தருகிறோம்
சென்ற பிறகு
தேடி அழுகிறோம்
மானுடமே மரித்த பிறகு
தனித்து அலைவாரா
கடவுள்.

























Comments

மானுடமே மரித்த பிறகு
தனித்து அலைவாரா
கடவுள்.

Popular posts from this blog