Skip to main content

Posts

Showing posts with the label குமரி எஸ். நீலகண்டன்.

நிலவும் தவளையும்

  அலையற்ற நீர் படுக்கையில் அயர்ந்த தூக்கத்தில் நிலா. நிலவிற்கு இரங்கி நீரைத் தொடாமல் விலகிச் செல்கிறது காற்று. இரவின் அமைதியில் எங்கிருந்தோ வந்து விழுந்த தவளையின் துள்ளலில் வளைந்து நெளிந்தது நிலா.  

மேன்மக்கள்

எல்லோரும் உடம்பின் வியர்வை ஊற்றுக் கண்களிலெல்லாம் வாசனைத் திரவமூற்றி காற்றில் போதையேற்றி சற்றே முகமெங்கும் வெள்ளை அடித்து வீதிக்கு வருகிறார்கள். அவர்களின் ஒரு கையில் பெரிய பூதக் கண்ணாடியும் இன்னொரு கையில் தார் சட்டியும். பூதக்கண்ணாடியால் ஒவ்வொருவரையும் கூர்ந்து பார்த்துவிட்டு அவர்கள் முகத்தில் சிறிது கரும்புள்ளி தென்பட்டால் கூட உடனடியாக அவருடைய உருவம் வரைந்து அதில் தார் பூசி எல்லோருக்கும் காட்டி இளித்து இன்பமடையும் மக்கள்.