Skip to main content

வரும்போகும்





முற்றத்தில் அடிக்கும்
வெயிலும்
பெய்யும் மழையும்
இப்போது இல்லை
ஓட்டிலிருந்து
தேள் வந்து விழும் என்ற
பயமுமில்லை
குளியலறையை
வசிப்பிடமாக்கிக் கொண்ட
கரப்பான்பூச்சியைக்
காணவில்லை
வாங்கி வைத்த
மாம்பழங்களை
குதறிச் செல்லும்
பெருச்சாளிகளின்
தொல்லை இல்லை
மழை பெய்தால்
ஆங்காங்கே ஒழுகும் என்ற
சிரமமில்லை
வெளவாலுக்கு
அடைக்கலம் தரும்
இடமாக இல்லம்
இனி இருக்கப்போவதில்லை
இனி நெஞ்சை நிமிர்த்தி
நடக்கலாம்
எங்கள் வீடு
ஓட்டு வீடு இல்லை
மாடி வீடென்று.







Comments

எளிமையாய் அருமையாய்.... மனதில் ஆழமாய்...