Skip to main content

மனதுக்குப் பிடித்த கவிதைகள் - தொகுதி - 2 - 148


அழகியசிங்கர்  



ஒவ்வாச் சுருதி  




ராஜசுந்தரராஜன் 






குளிர் கண்டிருந்தது காற்றில், 

என்னவோ செய்தது என் உடம்புக்கு. 

கட்டுக்கயிறில் நிம்மதியற்றுப் 
பரபரத்தது வீட்டு நாய். 
கட்டற்றுப் புணர்ந்தன தெரு நாய்கள் .

விடலை என் 
எதிரே தோன்றி 
ஒரு விற்பனைக்காரி 
வேண்டுமோ என்றாள்

முழம் மல்லிகை.



நன்றி :  உயிர் மீட்சி - ராஜசுந்தரராஜன் - இது ஓர் அன்னம் வெளியீடு - வெளியான ஆண்டு : 1986 - விலை ரூ.5.

Comments