Skip to main content

சுதந்திரத் தினத்தை முன்னிட்டு முன்பதிவுத் திட்டம்

அழகியசிங்கர் 



வித்யா சுப்ரமணியம் அவர்களின் 'உப்புக்கணக்கு' என்ற நாவல் நம் நாடு சுதந்திரம் அடையும் தறுவாயில் நடந்த உப்பு சத்தியாக்கிரகத்தை பின்னணியாகக் கொண்ட சரித்திரம் கலந்த சமூக நாவல்.  விருட்சம் வெளியீடாக திரும்பவும் வெளிவந்துள்ளது.  340 பக்கங்கள் கொண்ட இந் நாவலின் விலை ரூ.300.  
கிட்டத்தட்ட 100 நாவல்களும் 200க்கும் மேற்பட்ட சிறுகதைகளையும் எழுதி உள்ளார் வித்யா சுப்ரமணியம்.  உப்பு சத்தியாக்கிரகத்தை அடிப்டியாக வைத்து எழுதப்பட்ட 'உப்புக்கணக்கு' என்ற நாவல் வாசிப்பதற்கு புதிய அனுபவத்தை ஏற்படுத்தும். 
சுதந்திரத் தினத்தில் இப்புத்தகம் வெளியாக உள்ளது.   முன்பதிவு திட்டத்தில் சலுகை விலையாக ரூ.200க்குத் தர உத்தேசித்துள்ளேன். 
ஆகஸ்ட் 15 தேதிக்குள் பதிவு செய்பவர்கள் கீழ்க்கண்ட விருட்சம் கணக்கில் ரூ.200-ஐ முன்பணமாகச் செலுத்திப் புத்தகத்தை வாங்குவதற்கு ஆதரவு தரும்படி கேட்டுக்கொள்கிறேன்.
அழகான குடும்பக்கதையில் மிக லாவகமாக சுதந்திரப் போராட்டத்தை நுழைத்து இறுதி வரை குடும்பத்தையும் சுதந்திரப் போராட்டத்தையும் இரு தண்டவாளங்கள் போல் கொண்டு சென்றிருக்கிறார் இந் நாவலில்.  
கீழ்க்கண்ட கணக்கில் பணம் செலுத்தி முன்பதிவுத் திட்டத்திற்கு ஆதரவு தர கோருகிறேன்.

                NAVINA VIRUTCHAM ACCOUNT
INDIAN BANK, 
ASHOKNAGAR BRANCH
ACCOUNT No. 462584636 
IDIB Number. IDIB000A031
CONTACT : AZHAGIYASINGAR - 9444113205





Comments