Skip to main content

'மேலும்' விமர்சன விருது


அழகியசிங்கர்




பொதுவாக விமர்சர்களை யாரும் கண்டுகொள்வதில்லை.  ஆனால் üமேலும்ý ஆசிரியர் சிவசு ஒவ்வொரு ஆண்டும் விமர்சகர்களுக்குக் கௌரவம் அளிக்கிறார். 
இந்த ஆண்டு விமர்சன விருது பெறுபவர்கள்: க வை பழனிச்சாமி, வாசுதேவன், சண்முக விமல்குமார்.  மூவருக்கும் என் வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன். 
வரும் 08.07.2018 ஞாயிறு காலை 10 மணியிலிருந்து மாலை வரை தமிழ்த் திறனாய்வில் இருபத்தொன்றாம் நூற்றாண்டின் புதிய போக்குகள் பற்றிய கருத்தரங்கமும் நடத்துகிறார்.  இக்ஷா மையம், எழும்பூரில் நடக்கும் இக் கூட்டத்திற்கு அனைவரும் வரும்படி கேட்டுக்கொள்கிறேன். 
ýகூட்டத்தின் முதல் அமர்வில் üபூக்கோவும் தொல்காப்பியரும்ý என்ற தலைப்பில் ராஜா அவர்கள் உரை நிகழ்த்த உள்ளார்.  பூக்கோவையும் தொல்காப்பியத்தையும் எப்படி தொடர்பு படுத்திப் பேசப் போகிறார் என்பதை அறிய ஆவலாக உள்ளேன்.
கூட்டத்திற்கான அழைப்பிதழை இத்துடன் இணைத்துள்ளேன்.  

Comments