பிறையின் வளைவினில் வசதியாய் ஒரு குழந்தை உட்கார்ந்து கொண்டது. நிலாவும் குதூகலமாய் குழந்தையை உலகம் முழுவதும் சுற்றிக் காட்டிக் கொண்டிருந்தது. அதற்குள் அம்மா பள்ளிக்கு நேரமாகிறதென குழந்தையை அடித்து எழுப்பி பலவந்தமாய் இழுத்துப் போனாள்.
உங்களிடம் இருந்து மற்றுமொரு நிலவின் கவிதை .. மிக எதிர்பார்ப்போடு வாசித்தேன்.. நல்ல கவிதை.. ஆரம்பித்த கற்பனை அருமை .. முடிவு மாத்திரம் கொஞ்சம் பழகிப் போனது போலவே இருந்தது.. தொடருங்கள்.. வாழ்த்துகள்
இப்படித்தான் பல அம்மாக்கள் இருக்கிறோம்:) என்ன செய்வது தங்களின் குழந்தைமையை நினைவில் வைத்திருந்தால் கனவுகளோடு வாழப்பழகி இருக்கலாம் தான்.இயல்பான ஒரு கவிதை.
Comments
பெரியவர்களின் மன நிலையையும்
மிக அழகாக சித்தரித்துப்போகும்
உங்கள் கவிதை மிக மிக அருமை
தொடர வாழ்த்துக்கள்
அழகான கவிதை:)!
வளைவினில்
வசதியாய்
ஒரு குழந்தை
உட்கார்ந்து கொண்டது. //
மிக லயித்தேன். பல படிமங்களுக்கு வழி அமைக்கிறது இந்தக் கற்பனை. நன்றி.. வாழ்த்துக்கள்..