Skip to main content

ஒரு மழை நாள்


கார்மேக ஊர்வலத்தைக் கண்டு
மயில் தோகை விரிக்கும்
பூமியை குளிரச் செய்ய
வானம் கருணை கொள்ளும்
மரங்கள் தான் செய்த தவங்கள்
வீண்போகவில்லையென
மெய்சிலிர்க்கும்
குடை மனிதர்களுக்கு
மூன்றாவது கையாகும்
காகிதக் கப்பல்கள்
கணித சமன்பாடுகளைச்
சுமந்து செல்லும்
கொடியில் காயும்
துணிகளெல்லாம்
எஜமானியம்மாவை
கூவி அழைக்கும்
ஆடுகள் மே என்று
கத்தியபடி
கொட்டிலுக்கு ஓட்டமெடுக்கும்
தேகம் நனையச் செல்லும்
தேவதையை
கண்கள் வெறித்துப் பார்க்கும்.

Comments

மழைக் காட்சி ஒன்று அழகாய் மனதில் விரிகிறது...

Popular posts from this blog