Skip to main content

ப்ளோரிடா




ப்ளோரிடா என்ற இந்த ஊர்
எனக்குப் பிடித்திருக்கிறது
வீதியெல்லாம் நீரால்
துடைத்தது மாதிரி சுத்தமாய் இருந்தது
அங்கங்கே ஓங்கி உயர்ந்த மரங்கள்
வரிசையாய் வீற்றிருந்தன
இங்கேதான்
என்னைக் கவர்ந்த எழுத்தாளர்
ஐ.பி.சிங்கர் வாழ்ந்தாராம்..
மியாமி கடற்கரையில்
ஓங்கி உயர்ந்த கட்டிடங்களைக்
கடந்தவண்ணம்
காரில் பறந்தவண்ணம் இருந்தோம்
ஐ.பி சிங்கர் பெயரில் ஒரு தெருவைக்
கடந்து  சென்றதாக புதல்வன் சொன்னான்
என் மனதுக்குகந்த எழுத்தாளர்
ஏதோ ஒரு வீட்டில்
வாழந்திருப்பார்
இங்கிருக்கும்போது
அவர் ஞாபகமும் அவர் எழுத்தின் மணமும்
சுற்றி சுற்றி வந்தன..
ஏன்..............?

Comments

Popular posts from this blog