Skip to main content

நனைந்த சிறகுகள்


மழைக்குருவியின்
கிறீச்சல்கள் கொடியில்
காய்ந்து கொண்டிருந்த
துணிமணிகளை கொஞ்சம்
கொஞ்சமாக நனைத்து
விட்டிருந்தது.
பின்னர் வந்த மழைக்கு
நனைக்க ஏதுமின்றி.
ஏமாற்றத்துடன் திரும்ப
விரும்பாத மழை
குருவியின் சிறகுகளை
நனைத்துச்சென்றது

Comments

மதி said…
கவித்துவமான காட்சி.... மிக ரசித்தேன்

Popular posts from this blog