Skip to main content

மனதுக்குப் பிடித்த கவிதைகள் - 39

அழகியசிங்கர்  


வாழ்த்துப்பா


ப்ரியம்












ஆடம்பரமில்லை. தோற்றத்தில் ஆணவமில்லை. உலகில்
சைக்கிளைப் போல் ஓர் எளிதான வாகனம் எதுவுமில்லை.
மிதித்தால் உடல் நலத்திற்கும் கேடில்லை.  விழுந்தால் பெரிய
விபத்தேற்படுவதில்லை.  சுகாதாரத்திற்கு தீங்கில்லை.
சுற்றுப்புறச் சுழலுக்கும் கேடில்லை.  சைக்கிள் பழகாதவர்
இன்று எவருமில்லை.  சைக்கிள்களால் புவிக்கு எந்நாளும்
தொந்தரவில்லை.  வீட்டின் குஞ்ஞுட்டிகள் மிதித்துப் பழகும்போது
பார்த்து இரசிக்காத கண்களும் கண்களில்லை.

நகரசாலைகளில் சைக்கிள் செல்ல தனிவழியுண்டு.  மேற்கில்
சிலவிடம் சைக்கிளைத் தவிர, மற்ற வாகனங்கள் செல்ல
தடையுண்டு.  சைக்கிள் ஒரு தத்துவமாம்.  பூக்கள்போல
அதுவும் ஒன்றாம்.  எளிமையான வாழ்விற்கு எடுத்துக்காட்டாம்.

சைக்கிள்களால் வாழ்பவர் புவியில் பலகோடி.  சைக்கிளைப்போல்
வாழ்பவர் புவியில் சில கோடி.

சைக்கிளை நீயும் வாழ்த்துப்பா


நன்றி : அலைகளின் மீதொரு நிழல் - கவிதைகள் - ப்ரியம் -எழில் வெளியீடு, 21 மாதவரம் நெடுஞ்சாலை வடக்கு, பெரம்பூர், 
சென்னை 11 - முதல் பதிப்பு : டிசம்பர் 2001 - விலை : ரூ.35



Comments