Skip to main content

மனதுக்குப் பிடித்த கவிதைகள் - 33

அழகியசிங்கர்  


 உலகம்


ஷண்முக சுப்பையா



அணைக்க ஒரு
அன்பில்லா மனைவி.
வளர்க்க இரு
நோயுற்ற சேய்கள்.
வசிக்கச் சற்றும்
வசதியில்லா வீடு
உண்ண என்றும்
உருசியில்லா உணவு.
பிழைக்க ஒரு
பிடிப்பில்லாத் தொழில்.
எல்லாமாகியும்
ஏனோ உலகம்
கசக்கவில்லை.

நன்றி : எழுத்து பிரசுரம் - முதல் பதிப்பு : ஏப்ரல் 1975 - 19 - எ பிள்ளையார் கோயில் தெரு, திருவல்லிக்கேணி, சென்னை 5 - விலை ரூ.3 - 62 பக்கங்கள்

Comments