Skip to main content

மனதுக்குப் பிடித்த கவிதைகள் - 43


அழகியசிங்கர்  


 தீர்வு



சி மணி





என்ன செய்வ திந்தக் கையை
என்றேன்.  என்ன செய்வ தென்றால்
என்றான் சாமி.  கைக்கு வேலை
என்றி ருந்தால் பிரச்னை இல்லை.
மற்ற நேரம், நடக்கும் போதும்
நிற்கும் போதும் இந்தக் கைகள்
வெறுந்தோள் முனைத்தொங் கல்.தாங் காத
உறுத்தல் வடிவத் தொல்லை
என்றேன்.  கையைக் காலாக் கென்றான்


நன்றி : இதுவரை - சி. மணி - கவிதைகள் - வெளியீடு : க்ரியா -
முதல் பதிப்பு : அக்டோபர் 1996 - விலை : ரூ.100

Comments

Popular posts from this blog