Skip to main content

இலக்கியக் கூட்டங்களை சீக்கிரமாக முடியுங்கள்

அழகியசிங்கர்



பொதுவாக இலக்கியக் கூட்டங்கள் சீக்கிரமாக ஆரம்பிப்பதில்லை.  சரியாக மாலை  5 மணிக்கு ஆரம்பிப்பதாக சிற்பி அவர்கள் படைத்த கருணைக்கடல் இராமாநுசர் காவிய நூல் அறிமுக விழா  இருந்தது.  ஆனால்  மாலை  6 மணிக்குத்தான் ஆரம்பித்தது.  நல்லகாலம் நான் 6மணிக்குத்தான் சென்றேன்.  கொஞ்சம் தூங்கி விட்டேன்.

அங்கு பேசியவர்கள் எல்லோருக்கும் மரியாதை செலுத்தினார்கள்.  இதுவே அரைமணிநேரம் மேல் ஓடியிருக்கும்.  அதற்கு முன்னால் பேசுபவர்கள் பற்றிய அறிமுகமே 20 நிமிடங்களுக்கு மேல் போயிருக்கும். அப்புறம் ஒவ்வொருவராகப் பேச ஆரம்பித்தார்கள்.

முதலில் முனைவர் சிலம்பொலி செல்லப்பன் பேச ஆரம்பித்தார்.  கேட்டுக்கொண்டே இருக்கும்போது எப்போது பேச்சை நிறுத்துவார் என்று தோன்றியது. üமருத்துவர் சொல்லியிருக்கிறார்.  கூட்டத்தில் அதிக நேரம் பேசக்கூடாது,ý என்றே அரைமணி நேரம் மேல் பேசி விட்டார்.  அதேபோல் குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் அவர்களும் அரைமணிநேரத்திற்கு மேல் எடுத்துக்கொண்டு விட்டார்.

அவர் பேசியவுடன் கூட்டத்திலிருந்து பலர் வெளிநடப்பு செய்து விட்டார்கள்.  மருத்துவர் சுதா சேஷய்யன் அவர்கள் பேச ஆரம்பித்தார்.  மணி 8.30 ஐத் தொட்டுவிட்டது.  இனிமேல் அங்கு இருக்க முடியாது என்று தோன்றியது.  உடனே எழுந்து கிளம்பி விட்டேன்.

இதுமாதிரியான இலக்கியக் கூட்டங்களில் ஒரே ஒருவரை மட்டும்பேசக் கூப்பிட்டு, கூட்டத்தை ஒரு மணி நேரத்திற்குள் முடித்திருக்க வேண்டும்.  5 மணிக்கு ஆரம்பித்து 7 அல்லது 7.30 மணிக்குள் கூட்டம் முடித்திருக்க வேண்டும்.

நான் எழுந்து வந்தபிறகு அக் கூட்டம் எப்போது மாலை முடிந்திருக்கும் என்பதை யோசித்துப் பார்த்தேன்.  நிச்சயமாக இரவு 10 மணிக்கு முடிந்திருக்கும்.




Comments

Popular posts from this blog