Skip to main content

மனதுக்குப் பிடித்த கவிதைகள் - 36

அழகியசிங்கர்  

வீடு                              

இளம்பிறை


சன்னலுக்கு வெளியே                        
சாய்ந்திருப்பது யார்?
நள்ளிரவு விழிப்பில்
பயந்தபின்பு
நினைவிற்கு வரும்
மாடிப்படிகள்.

கைக்கெட்டா தூரத்தில்
பழுத்து உதிரும்
பப்பாளிப் பழங்களைப்
பார்த்து நின்றதில்
இன்றைக்கு.....

பொங்கி வழிந்துவிட்டது பால்!
"சன்னல் கம்பிகளில்
சிலந்தி வலையைக்கூட
தட்டிவிடாமல....
என்னதான் குடித்தனம்
நடத்துகிறாயோ.....?"
திட்டிப் போகிறாள் சுமதி.
சன்னலை
மெள்ள மூடி
திறந்து கொண்டிருப்பதையும்
காற்று,
பலமாக வீசும்போது
பதறிக்கொண்டிருப்பதையும் சொன்னால்
"பைத்தியம்" என்பாள்.

நன்றி : முதல் மனுசி - கவிதைகள் - இளம்பிறை - ஸ்நேகா - 348 டி டி கே சாலை, இராயப்பேட்டை, சென்னை 600 014 - விலை : 75

Comments

Popular posts from this blog