Skip to main content

புத்தாண்டே புத்தாண்டே

 புத்தாண்டே புத்தாண்டே




அழகியசிங்கர்






இன்று காலை எழுந்தபோது
புத்தாண்டு என்று மறந்து விட்டது.
ஆனால் 
கோயில்களுக்குப் போனோம்
கூட்டம் நிரம்பி வழிந்தது

தொற்றுப் பயத்தால் 
க்யூவில் நிற்கவில்லை

ஒரு வருடம் ஓடிவிட்டது
பயத்தைக் காட்டி
மிரட்டி விட்டுப் போயிற்று

புத்தாண்டே வருக வருக என்று
கூவிக் கூப்பிடப் போவதில்லை

ஆனால்
இனி வருகின்ற நாட்களில் 
எல்லாம் சரியாக நடக்க வேண்டும்

வண்ணமயமான கோலங்கள் மூலம்
தெருவில் புத்தாண்டை வரவேற்றார்கள்

புத்தாண்டிற்கு முதல் நாள்
குடியிருப்பவரின் வீட்டில் வயதான பெண்மணி
இறந்து விட்டாள். 
                               01.01.2021

Comments