Skip to main content

மனதுக்குப் பிடித்த கவிதைகள் - தொகுதி - 2 - 152

அழகியசிங்கர்



பிரத்யேக பிராணி



நெகிழன்



யாரை
பிடிக்கும் பிடிக்காதென்றெல்லாம் தெரியாது
எதற்கு
வருகிறது போகிறதென்றும் தெரியாது
எதற்கதை
கொல்ல வேண்டுமென்றும் தெரியாது
எனக்குத் தெரிந்தது
அதுவொரு எலி

பார்க்கச் சின்னதாக இருக்கும்
சிறு தேங்காய் பத்தைக்கோ வடைக்கோ
அல்லது தக்காளிக்கோ
தன் உயிரையே விடுகிற அல்பம்
யாரும்
எளிதில் சித்திரவதைச் செய்ய முடிகிற
கொல்ல முடிகிற ஜந்து
எல்லாவற்றுக்கும் மேலாக
நம்மை வீர புருஷர்களாக்கும் பிரத்யேக பிராணி.


நன்றி : பூஜ்ய விலாசம் - நெகிழன் - வெளியீடு : மணல்வீடு - ஏர்வாடி, குட்டப்பட்டி அஞ்சல், மேட்டூர் வட்டம், சேலம் மாவட்டம் - 636 453 தொலைப்பேசி : 9894605371 விலை :ரூ.80 - பக்கம் : 65

Comments