Skip to main content

விருட்சத்தில் பிரசுரமான மொழிபெயர்ப்பு கவிதைகள்


அழகியசிங்கர்  


மார்ஸிலிஜஸ்மார்டினைடிஸ்


நித்தியம்






அதிகாலை விழித்த கிழவன பார்வையில்
வாசல் முன் அன்றைய சுமை.

நெருப்பு வளர்த்தல், கட்டளையிடல்,
வாளிகளின் ஒலி கிழவனின் பெருமூச்சு
அனைத்துமே அடக்கம் அச்சுமையில்

அவிழ்க்கப்பட்ட சுமையில்
ஆற்றவேண்டிய காரியங்களால்
நிறைந்து போனது முற்றம் முழுதும்.
கதவின் கீச்சொலி

வைக்கோலின் குசுகுசுப்பு
ஜன்னலின் பளிச்சிடல்
கால்நடைகளின் பெருமூச்சு
பறவைகளின் இன்னிசை
மனிதர்களின் பேச்சரவம்
சக்கரங்களின் சடசடப்பு

அந்தியும் வந்தது
இன்பமயமான நீண்ட அந்திமாலை.

மூலம் : லிதுவேனியக் கவிதை 

ஆங்கில வழி தமிழில் : நஞ்சுண்டேஸ்வரன்.

(நவீன விருட்சம் ஜøலை - செப்டம்பர் 1989)

Comments