Skip to main content

இப்போது வாழ்வது


கேள்வி கேட்பவர் : நான் பார்க்கிறவரையில் என் உடலில் எந்தத் தவறும் இல்லை அதேபோல் என் உண்மை சொரூபத்திலும். இரண்டுமே என்னுடைய தயாரிப்பு இல்லை. அதை மேன்மைப் படுத்தத் தேவையுமில்லை. எது தவறாக உள்ளதென்றால் 'உள் உடல்'. அதை 'மனம்' என்றோ, உள்ளுணர்வு என்றோ எப்படியெல்லாமோ குறிப்பிடலாம்.


மஹாராஜ் : உன் மனத்தைப் பொறுத்தவரை எது தவறு என்று கருதுகிறாய்?


கே.கே : அது நிம்மதியில்லாமல் இருக்கிறது. மகிழ்ச்சியை அடைய பேராசை உடையதாக உள்ளது. அதேபோல் மகிழ்ச்சியற்ற நிலையை எண்ணி பயப்படுகிறது.


மஹாராஜ் : மகிழ்ச்சியை நாடுவதிலும், மகிழ்சியற்ற நிலையை உதறுவதிலும் என்ன தவறு இருக்கிறது? துன்பம், மகிழ்ச்சி என்ற இரு கரைகளில்தான் வாழ்க்கை என்ற ஆறு ஓடிக்கொண்டிருக்கிறது. எப்போதும் மனம் வாழ்க்கையுடன் பயணிக்கத் தடுமாறும்போதுதான் அது கரைகளில் மாட்டிக்கொள்கிறது. அது ஒரு பிரச்சினையாக உருவெடுக்கிறது. வாழ்க்கையுடன் ஒன்றிப்போவதில் நான் குறிப்பிடுவது ஏற்றுக்கொள்வது என்ன வருகிறதோ அது வரட்டும், என்ன போகிறதோ அது போகட்டும் என்று. எதைப் பற்றியும் ஆசைப் படாதே, எதைப் பற்றியும் பயப்படாதே, எது எப்போது நடந்தாலும் உண்மையை அவதானித்துக்கொள். ஏற்படுவது நீ அல்ல. உனக்குத்தான் ஏற்படுகிறது. கடைசியாக நீ அவதானிப்பவனாகவும் இல்லை. நீதான் முழுக்க ஏற்றுக் கொள்கிற சக்தி உள்ளவனாக இருக்கிறாய். அதனால் உன்னை அரவணைத்துக் கொள்ளும் உள்ளுணர்வுதான், உருவாக்கக் கூடியதாகவும், வெளிப்படுத்தக் கூடியதாகவும், திறன் படைத்ததாகவும் உன்னை ஆக்குகிறது.


கே.கே : இன்னும் உடலுக்கும், ஆத்மாவிற்கும் இடையில் மேகம் சூழ்வதுபோல் எண்ணங்களும், உணர்வுகளும் உள்ளன. அவை உடலுக்கும் ஆத்மாவிற்கும் எந்த உதவியையும் செய்வதில்லை. இந்த எண்ணங்களும், உணர்வுகளும் மேலோட்டமானவை, வெளிப்படையானவை, அர்த்தமற்றவை. மூளையில் பதிந்துள்ள தூசுகள் போல் குருடாக்குபவை, உறையவைப்பவை. இருந்தும், நம்மைத் தடுமாற வைக்கவும், அழிக்கவும், .அவை இருக்கத்தான் செய்கின்றன.


மஹாராஜ் : நிச்சயமாக. ஒரு அனுபவத்தின் நினைவு அனுபவமாக இருக்காது. எதிர்பார்க்கக் கூடிய ஒன்றாகக் கூட இருக்காது. நிச்சயமாக இந்தத் தருணத்தின் அனுபவத்தை அறிய வித்தியாசமான தனிப்பட்ட ஏதோ ஒன்று உள்ளது. ஏற்கனவே முடிந்த, வரப்போகிற ஒன்றில் இல்லை. உண்மைநிலையுடன் கூடிய இந்தத் தருணத்தின் வாழ்வின் தன்மையில் உள்ளது. வெளிச்சம் காட்டக்கூடிய ஒன்றாக அது உள்ளது. உண்மையான நடப்பியியலின் முத்திரை அதில் உள்ளது. இதை இறந்தகாலமும், எதிர்காலமும் தர இயலாது.


கே.கே :: எது தர உள்ளது 'உண்மையான நடப்பியியலின் முத்திரையை?'


மஹாராஜ் : எதிர்காலத்தையும், இறந்தகாலத்தையும் வேறுபடுத்த, உண்மையில் வித்தியாசமான எதுவும் இப்போதைய சம்பவத்தில் இல்லை. ஒரு சில கணத்தில் இறந்த காலம் உண்மையாக இருக்கக் கூடும். அதே போல் எதிர்காலமும் மாறலாம். ஆனால் 'இப்போதை' வித்தியாசப்படுத்த என்ன இருக்கிறது? பொதுவாக என் இருப்பு. நான் இப்போது இருந்துகொண்டு இருப்பதால் நான் உண்மையாக இருக்கிறேன். இப்போது என்னிடம் என்ன உள்ளதோ அது என் சொரூபநிலையுடன் பகிர்ந்து கொள்கிறது. கடந்த காலம் நினைவில் மட்டும் உள்ளது. எதிர்காலம் கற்பனையில் உள்ளது. தற்போதைய நிகழ்ச்சி என்பதில் ஒன்றுமில்லை. அது மிகச் சாதாரணமாக கடிகாரத்தின் ஒலி அடிப்பதுபோல் இருக்கலாம். கடிகாரத்தின் ஒவ்வொரு ஒலிக்கும் வித்தியாசமில்லை என்றாலும், இப்போதைய மணி ஒலிக்கும், முன்பு அடித்த ஒலிக்கும் வித்தியாசம் உண்டு. அதேபோல் அடுத்தது அடிக்கப்போகும் மணி ஒலிக்கும் வித்தியாசமுண்டு. நீ எதிர்பார்த்ததுபோல அல்லது ஞாபகப்படுத்தியதுபோல. எது என் கவனத்தில் இப்போது இருக்கிறதோ அது என்னுடன் எப்போதும் உள்ளது. என்னுடைய செரூபநிலையிலிருந்து நான் இப்போதைய நிகழ்வை வெளிப்படுத்துகிறேன்.


கே.கே :: ஆனால் நாம் ஞாபகத்தில் உள்ள விஷயங்களுடன் 'அது இப்போதைய உண்மை' என்று நாம் ஈடுபடுவோம்.


மஹாராஜ்: நாம் ஞாபகங்களை மதிப்பது அவை இப்போதில் வரும்போதுதான். மறந்து போனதை நாம் எடுத்துக்கொள்வதே கிடையாது. அதை ஞாபகப்படுத்திக்கொள்ளும்போது அதாவது இப்போதைக்குக் கொண்டுவரும்போதுதான்.


கே.கே : ஆமாம் நான் பார்த்திருக்கிறேன். 'இப்போதில்' சிவ தெரியாத விஷயம் தொடர்ந்து நடந்துகொண்டே வரும் 'இப்போதில்' தற்காலிக உண்மைபோல் தோற்றம் தரும்.


மஹாராஜ் : தெரியாத விஷயம் என்று சொல்லக் கூடாது. அது தொடர்ந்து செயல்படுவதைப் பார். நீ பிறந்ததிலிருந்து அது மாறி உள்ளதா? நம்மைச் சுற்றிலும் உள்ள விஷயங்களும், ஞாபகங்களும் எப்போதும் மாறிக்கொண்டே இருக்கும். ஆனால் இப்போது என்ன என்பதில் உள்ள உண்மைநிலை எப்போதும் மாறாது, ஏன் கனவிலும் கூட..


கே.கே : ஆழ் தூக்கத்தில் தற்போதைய உண்மைநிலை பற்றிய அனுபவம் இல்லை

மஹாராஜ் : ஆழ் தூக்கத்தில் குறிப்பிடப்பட வேண்டிய ஞாபகங்கள் இல்லாமலிருக்கலாம். ஆனால் பொதுவான ஞாபகமான அரோக்கியநிலை தொடர்ந்து இருந்துகொண்டிருக்கும். 'ஆழ் தூக்கத்தில் இருக்கிறேன்' என்று சொல்வது 'நான் இல்லை' என்று சொல்கிற தன்மையிலிருந்து மாறுபடுகிறது.


கே.கே : முதலில் இருந்து நாம் கேள்வியைச் சொல்லிப் பார்ப்போம். அடிப்படையான வாழ்க்கைக்கும், வாழ்க்கையின் உணர்வுக்கும் மனமும் அதனுடைய மாறும் தன்மைகளும் இருக்கின்றன. தொடர்ந்து வெளிப்படும் முடிவில்லாத நினைவோட்டம் அர்த்தமற்றவை, துன்பத்தைத் தரக்கூடியவை. துன்பம்தான் எப்போதும் உள்ள நிலை. மகிழ்ச்சியான நிலை என்று நாம் சொல்வது, இரு துன்பமான நிலைகளின் இடைவெளியில்தான். ஆசையும், பயமும் வாழ்க்கையுடன் பின்னிப் பிணைந்தவை. அவை இரண்டும் துன்பத்தை உருவாக்கும். நம்முடைய கேள்வி, மகிழ்சிகரமான மனம் என்பது சாத்தியமா?


மஹாராஜ் :ஆசை என்பது மகிழ்ச்சியிலிருந்து உருவாகும் ஞாபகம் மட்டும். அதேபோல் பயம் துன்பத்திலிருந்து உருவாகக் கூடியது. இரண்டுமே மனதை நிம்மதியாக இருக்க விடுவதில்லை. ஒரு துளி மகிழ்ச்சியின் கணம் என்பது தொடர்ந்து ஓடிக்கொண்டிருக்கும் துன்பத்திலிருந்து வரக்கூடியது. எப்படி மனம் சந்தோஷமாக இருக்க முடியும்?


கே.கே : நாம் ஆசையை நாடும்போதும் துன்பத்தை எதிர்பார்க்கும்போதும் அது உண்மையாக இருக்கிறது. ஆனால் எதர்பாராத தருணங்கள் ஏற்படுவதுண்டு. எதிர்பாராத சந்தோஷம். வெறும் சந்தோஷம் மட்டும். அதாவது ஆசையால் பாதிக்காத சந்தோஷம். கடவுள் கொடுத்தது.


மஹாராஜ் : இருந்தாலும் மகிழ்ச்சி என்பது துன்பத்தை பின்னணியாகக் கொண்டு இயங்கும் மகிழ்ச்சிதான்.


கே.கே : துன்பம் என்பது பிரபஞ்சத்தின் உண்மையா அல்லது மூளை விஷயமா?


மஹாராஜ் :: இந்தப் பிரபஞ்சம் முழுமையாக உள்ளது. எங்கே முழுமை உள்ளதோ எங்கே எந்தக் குறையும் இல்லையோ அப்போது எது துன்பத்தைத் தர இயலும்?


கே.கே : இந்தப் பிரபஞ்சம் முழுமையாக இருக்கலாம் ஆனால் சில விபரங்களில் முழுமை இல்லாமல் உள்ளது.


மஹாராஜ் : முழுமையின் ஒரு பகுதியான முழுமை கூட பூரணத்துவமாக உள்ளது. தனியாக அதைப் பார்க்கும்போதுதான் அது கோளாறு உடையதாகத் தோன்றும். அதுதான் துன்பத்தின் ஆரம்பமாகவும் இருக்கும். எது தனிமைப்படுத்துகிறது?

கே.கே : விஸ்தாரமில்லாத மனம் கூட காரணமாக இருக்கலாம். அப்படிப்பட்ட மனது முழுமையை பகுதியின் மூலம் உணரமுடியாது.

மஹாராஜ் : நல்லது. மனது அதனுடைய இயல்புபடி பிரிந்து எதிர்ப்பையும் தெரியப்படுத்தும். வேறு எதாவது மனம் இருக்கிறதா? எல்லாவற்றையும் ஒழுங்கு செய்து பூரணத்துவத்தைத் தர. அது முழுமையை பகுதியின் மூலம் உணரும். அதேபோல் பகுதியை, முழுமையுடன் ஒருங்குப் படுத்தவும் செய்யும்.


கே.கே : இன்னொரு மனம் எங்கே போய் பார்ப்பது?


மஹாராஜ் : குறுகியத் தன்மை, பிரித்தாளும்தன்மை, எதிர்ப்பைத் தெரிவிக்கும் தன்மை என்று எல்லாவற்றையும் மீறிய மனத்தை நோக்கிச் செல்ல வேண்டும். நமக்குத் தெரிந்த மனக் கிலேசங்களை முடிவுக்குக் கொண்டு வருதல். எப்போது இது எல்லாம் முடிவுக்கு வருகிறதோ அப்போதுதான் இன்னொரு மனம் பிறக்கிறது.


கே.கே : அந்த இன்னொரு மனதில் சந்தோஷமும் துக்கமும் எப்போதும் இருப்பதில்லை.


மஹாராஜ் : நம்ம விருப்பப்படி தெரிந்தும் உதறியபடியும் அல்ல. உண்மையில் அன்பை வெளிப்படுத்த சொற்களைத் தேடும்போது பல தடைகளைச் சந்திக்கிறோம். நான் குறிப்பிடும் மனம் எப்போதும் அன்பு நிறைந்தது. சூழ்நிலைகளை எதிர்த்துப் போராடக்கூடியது. ஆரம்பத்தில் வெறுப்படையக் கூடியதாக இருந்தாலும், இறுதியில் வெற்றி அடையக் கூடியது.


கே.கே : பாலம் போல் அன்பானது நமது ஆன்மாவிற்கும் உடலுக்கும் இடையே செயல்படுவதாகத் தோன்றுகிறது.


மஹாராஜ் : வேறு என்ன? மனம் பெரிய பள்ளத்தை உருவாக்குகிறது. உணர்வுள்ள இருதயம் அதைத் தாண்டி விடுகிறது.

Comments