துளி - 186
அழகியசிங்கர்
	கவிதை நேசிக்கும் கூட்டத்தை நேற்று நடத்தினேன். இது 47வது கூட்டம்.  நண்பர்களின் துணையின்றி நடத்தியதில்லை.  மற்றவர்களுடைய கவிதைகளை வாசித்தோம்.
	பலருடைய கவிதைகளை வாசித்தோம்.  நான் ரெங்கநாயகி கவிதையையும், ஆத்மாநாம்  கவிதையையும் வாசித்தேன்.
	கூட்ட ஆரம்பத்தில் நான் விருட்சம் இதழிலிருந்து  ஒரு கவிதை வாசித்தேன்.  காசியபன்  கவிதையை வாசித்தேன்.  பின் ஒரு கவிதைப் புத்தகத்தை அறிமுகம் செய்தேன்.
	நான் அறிமுகம் செய்த கவிதைப் புத்தகம் பெயர்.  ஜிதேந்திரனின்  புத்தகம்.  'கல் சூடாக இருக்கிறது.' 
	108 பக்கங்கள் கொண்ட இந்தப் புத்தகத்தின்  விலை ரூ.100. சந்தியா பதிப்பக வெளியீடாக  வந்துள்ளது.
			எத்தனை கவனமிருந்தும்
			நிகழ்ந்துவிடுகிறது விபத்து.
			மோதிக் கொன்றோம்
			நானும் ரயில் பூச்சியும்!
			என் சக்க ரத்தில்
			நசுங்கியது ரயில்.
			இப்பொழுதெல்லாம் 
			என்னை முந்திச் செல்கின்றன
			ரயில் பூச்சிகள்.
			பிறகொரு பொழுதில்
			ஒன்றின்மீது ஒன்றாக
			உதட்டில் சிறு புன்னகையோடு நானும்
			ஊர்ந்து சென்றேன்!
	“”

Comments