Skip to main content

யாக்கை

 

ஆழ்கடல்
அமைதியாக இருக்கும்
கூட்டம் கடலலையை
கண்டு ரசிக்கும்

மேகக் கூட்டம்
படையெடுக்கும்
வானம்பாடி பாட்டுப் படிக்கும்

காட்டுப் பாதையில்
பூத்த மலர்
பறிக்க எவருமில்லை

வைகறை
மூடுபனி
உறக்கம் கலையவில்லை

திருத்தேர் வீதிஉலா
பலூன் வியாபாரியை
மொய்க்கும் சிறார்கள்

தீபாவளி நள்ளிரவு
வெடிச்சத்தம் ஓயவில்லை

தக்கை அசைகிறது
தூண்டிற்புழுவுக்கு
ஆசைப்பட்ட மீன்
பாத்திரத்தில் துள்ளுகிறது.










 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Comments

கவிதை துள்ளுகிறது... மனம் அள்ளுகிறது...