Skip to main content

கிளிஞ்சல்கள்

மின்விசிறி
புத்தகத்தின் பக்கங்களைப்
புரட்டுகிறது
கோடுகள் தான்
ஓவியமாகிறது
நதியின் போக்கிலே
சடலம் மிதக்கிறது
சுவரொட்டி
மனிதர்களுக்கா
மாடுகளுக்கா
தண்ணீர்க் குழாயிலிருந்து
தவளை வெளிவந்தது
வானம் கறுத்தது
காற்று கலைத்தது
ரசமிழந்த கண்ணாடி
குப்பைத் தொட்டியில்
சாக்கடையில் மிதக்கிறது
ரப்பர் பந்து
காகம் கரைந்தது
வாழை இலை நறுக்கினேன்
விருந்தினர்களை எதிர்பார்த்து
கடலைப் பார்த்ததற்கு
சாட்சியாக
இந்தக் கிளிஞ்சல்கள்.

Comments

Popular posts from this blog