Skip to main content

நிலாவைத் தின்ற எறும்பு



நீரில் மிதந்த எறும்பு
அலையினில் அசைந்து
கொண்டிருந்த நிலாவை
கடித்து கடித்து இழுத்தது.
எறும்பின் கூர்வாய்க்குள்
நிலாவின் விழும்பு
இழுபடுவது போல் தோன்ற
இன்னும் உற்சாகமாய்
இழுக்க முனைகையில்
நிலாவைத் தின்ற
எறும்பின் சுவையறிந்த
ஒரு பறவை
எறும்பைக்
கவ்விப் பறந்தது.

Comments

வாழ்வின் சுழற்சி.

கற்பனை நன்று.
oh!god!...nalla katpanai.....
http://navinavirutcham.blogspot.com/2011/07/blog-post_1888.html

etha.Elangathilakam
http://www.kovaikkavi.wordpress.com

Popular posts from this blog