Skip to main content

புதிய ஊர்





நான் பார்த்துக்கொண்டிருந்த இடம்

என் கனவாக இருந்தது

எப்போதும் தண்ணீர்

தட்டுப்படாமல் கிடைத்தது

மின்சாரம் முணுக்கென்று போகாமலிருந்தது

மழையும் வெயிலும்

மாறி மாறி வித்தைக் காட்டிக்கொண்டிருந்தன

எங்கும் பார்த்தாலும்

அசையாமல் கட்டிடங்கள்

காத்துக்கொண்டிருந்தன

மனிதர்கள்

உள்ளேயிருந்து வெளியில் வந்தார்களா

அல்லது

வெளியிலிருந்து உள்ளே வந்தார்களா

என்பது தெரியவில்லை

நடந்துபோய் பொருள் வாங்க

வேண்டுமென்றால்

காரைக் காட்டினான் புதல்வன்

நாங்கள் அசைவற்று நின்றிருந்தோம்...



21.07.2011

1.30 pm

Comments

"புதிய ஊர்" அல்லவா??

நாங்கள் அசைவற்று நின்றிருந்தோம்...//

அப்படித்தான்.. பழகிவிடும் சில காலங்களில்...
அதன் தொடர்ச்சியாய் ஒரு வரி கூட...
மனம் மட்டும் பழைய ஊருக்கும் புதிய ஊருக்கும் அலைந்து கொண்டிருந்தது.
எல்லா சூழ்நிலைகளிலும் மனசோட ஊசலாட்டம் இருக்த்தான் செய்யும் போலிருக்கு