Skip to main content

மனதுக்குப் பிடித்த கவிதைகள் - தொகுதி - 2 - 120


அழகியசிங்கர்  


எல்லா சுவர்களும்


ஆர் புருஷோத்தமன்





கேட்பதை எல்லாம்
வாங்கிக் கொடுங்கள் குழந்தைகளுக்கு

வண்ணம் வழியும்
பட்டாம் பூச்சிகளையும்
பறந்து திரியும் தும்பிகளையும்
பிய்த்து மகிழட்டும்

குச்சு மிட்டாயோ
குடை ராட்டினமோ
உங்கள் சில்லரைகளை
அள்ளிக் கொடுங்கள்

மணியலிக்கும் யானையின் பின்னே
சாலையின் இறுதிவரைக்கும்
சென்று மீளட்டும்.

சந்தோஷம் பூத்திடும்
தளிர் முகங்களில்
படரவேண்டாம் ஒருபோதும் சோகம்.

களங்கமற்ற குழந்தைகள் விழிகளில்
மறைந்து கிடக்கிறது சொர்க்கம்.
மரணத்தின் இறுதிவிநாடிகளில்
தரிசியுங்கள் குழந்தைகளை
வெளிச்சத்தின் வாசல்திறந்திருக்கும்
உங்களுக்காக,

மெல்லிய முத்தங்களில்
இடிந்து வீழ்கின்றன
அத்தனைச் சுவர்களும்


நன்றி : மரங்களுக்காகவும் சில வீடுகள் - ஆர் புருஷோத்தமன் - பக்கங்கள் : 80 - விலை : ரூ.25 - பதிப்பித்த ஆண்டு : 2002 - வெளியீடு : விடியல் வெளியீடு, 8 கைலாசபுரம் முதல் தெரு, மேற்குத் தாம்பரம், சென்னை 600 045

Comments

Popular posts from this blog