Skip to main content

22.09.2012ல் நடந்த அசோகமித்திரனின் ஒளிப்படம் - 4 - கடைசிப் பகுதி


அழகியசிங்கர்



அசோகமித்திரன் கூட்டத்தை சிறப்பாகப் படம் பிடித்தவர் க்ளிக் ரவி.  அவரிடம் ஏன் நீங்கள் ஆவணப்படம் எடுக்கக் கூடாது என்று கேட்டதற்கு தன்னால் அது சாத்தியமில்லை என்று கூறி உள்ளார்.  எனக்கு இது ஆச்சரியம்.  ஆவணப்படத்தைப் பற்றி ஒன்றும் தெரியாத நான், என்னுடைய சோனி காமிராவிலேயே ஆவணப்படம் எடுக்கலாமா என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன்.
இந்தக் கூட்டத்தின் கடைசிப் பகுதி இது.  மறைந்த எழுத்தாளர் மவே சிவக்குமார் இதில் பேசி உள்ளார்.  இந்த ஒளிப்படத்தின் முக்கியத்துவம் எல்லோரும் பார்த்து ரசிக்க வேண்டும் என்பதுதான். ஒரே சமயத்தில் எல்லாவற்றையும் பார்க்கும்படி இல்லாமல் நான்குப் பகுதிகளாகப் பிரிந்து இது காணப்படுகிறது.  இது தானகவே அப்படி பதிவாகி உள்ளதாகத் தோன்றுகிறது.  க்ளிக் ரவி நன்றாக எடிட் செய்துள்ளார்.  
இதேபோல் இன்னொரு ஒளிப்படம் ஆன ந பிச்சமூர்த்தியின் நூறாண்டு விழா நிகழ்ச்சியும் காட்ட முடியுமா என்று பார்க்கிறேன்.

Comments

Popular posts from this blog