Skip to main content

மனதுக்குப் பிடித்த கவிதைகள் - 77

மனதுக்குப் பிடித்த கவிதைகள் - 77

அழகியசிங்கர்  

 அம்மாவும் அப்பாவும்

ஹேச் ஜீ ரசூல் 



ஒன்றும் சொல்லவில்லை அப்பா

சாயங்காலம் முழுவதும்
நான்பாண்டி விளையாடியபோதும்
தம்பி கிட்டிப்புள் விளையாடிவிட்டு
பக்கத்து வீட்டுப்பையனை
அடித்துவிட்டு வந்தபோதும்

கிளாஸிலே முதல் மார்க்கெடுத்து
நான் பாஸôன போதும்
எட்டாம் கிளாஸில்
இரண்டாவது தடவை
தம்பி பெயிலான போதும்

இடையே ஒரு தடவை
வாய்திறந்தார் அப்பா.

இப்போதெல்லாம்
ஏழுமணிக்கே பொங்கி சமச்சு
சாதம் கெட்டி கொடுக்கணூம்
காலேஜ÷க்கு போகும் தம்பிக்கு

இப்போதைக்கு ஒன்றும் சொல்வதில்லை
அம்மா மட்டும்
அப்பா எதைச் சொன்னாலும்
தலையாட்டிக் கொண்டே.

நன்றி : பூட்டிய அறை - ஹெச் ஜி ரசூல் - மொத்தப் பக்கங்கள் : 88 - வெளியீடு : திணை வெளியீட்டகம், 30 பகவதி லாட்ஜ், நாகர்கோவில் - வெளியான ஆண்டு : மே 1998 - விலை : ரூ.30


பின் குறிப்பு : மனதுக்குப் பிடித்த கவிதைகள் என்ற தலைப்பில் நான் 100 கவிதைகளை கவிதை நூல்களிலிருந்து மட்டும் எடுத்துப் புத்தகமாகக் கொண்டு வர உள்ளேன்.  ஆனால் என்னிடம் கைவசம் 400க்கும் மேற்பட்ட புத்தகங்கள் உள்ளன.  இன்னும் சில கவிதைப் புத்தகங்கள் நான் வாங்கவும் வேண்டும்.  எப்படி இதில் 100 கவிதைகள் மட்டும் தேர்ந்தெடுக்கப் போகிறேன் என்பது தெரியவில்லை.  அதனால் முதல் நூறு, இரண்டாவது நூறு என்று கவிதைகளைத் தேர்ந்தெடுக்க உள்ளேன்.  ரசூல் அவர் கைப்பட கையெழுத்துப் போட்டு அனுப்பிய கவிதைத் தொகுதி இது. சில தினங்களுக்கு முன் தற்செயலாக இந்தப் புத்தகம் கண்ணில் தட்டுப்பட்டது.  எளிமையான வரிகளின் மூலம் பல உண்மைகளை சொல்லாமல் சொல்வதுதான் கவிதை.

Comments