Skip to main content





தமிழ் நடிகர்களில் சிலர் மாத்திரம் நம் கவனத்தைக் கவர்வார்கள். அவர்கள் நடிப்பு மட்டும் இல்லாமல் தீவிர வாசகர்களாக இருப்பார்கள். நாசர் அவர்களில் ஒருவர். படிப்பு மட்டுமல்ல, நடிப்பதிலும் திறமையானவர். பேசாமல் கண் அசைவுகள் மூலம் நடிக்கக் கூடிய திறமையானவர். எந்தப் பாத்திரத்தை ஏற்று நடித்தாலும் அந்தப் பாத்திரமாக மாறிவிடுவார். தீவிர வாசகர். அசோகமித்திரன் எழுத்துக்களில் அபிமானம் உடையவர். அசோகமித்திரனின் புலிக்கலைஞன் என்ற குறும்படத்தில் நடித்துள்ளார். மொத்தமே 16 நிமிடங்கள் கொண்ட படம் என்று நினைக்கிறேன். நாசர் மாதிரி இலக்கியத்தில் ஆர்வம் உள்ளவர் ரோகிணி, வசந்த், மிஷ்கின், கமல்ஹாசன் போன்றவர்கள். 

அம்ஷன்குமார் ஒரு தீவிர இலக்கியவாதியாக இருந்து பின் சினிமாத் துறையில் அடியெடுத்து வைத்தவர். அவர் அசோகமித்திரனை வைத்து எடுத்த ஆவணப் படம் பலவிதங்களில் சிறப்பானவை. இந்த ஆவணப்படமும், நாசரின் புலிக்கலைஞன் குறும்படமும் நாளை நிகழ்ச்சியில் முக்கியப் பங்கு வகிக்கின்றன.

Comments

Popular posts from this blog