Skip to main content

அசோகமித்திரன் - நினைவேந்தல் கூட்டம்


வரும் வெள்ளி அன்று மாலை 5.30 மணிக்கு மயிலாப்பூரில் உள்ள கவிக்கோ மன்றத்தில் ஏற்பாடு செய்துள்ளோம். தலைமை ஏற்று நடத்துவதற்கு இந்திரா பார்த்தசாரதி ஒப்புக்கொண்டுள்ளார். புலிக்கலைஞன் என்ற அசோகமித்திரனின் சிறுகதையின் குறும்படம் திரையிடப்படும்.

கீழ்க்கண்டவர்கள் கூட்டத்தில் கலந்துகொண்டு சிறப்பிக்க உள்ளார்கள். பெரும்பாலோரை தொடர்புகொண்டு அவர்கள் அனுமதியை இன்னும் சில தினங்களில் பெற முயற்சிப்போம்.

1. எஸ் வைதீஸ்வரன் 2. சா கந்தசாமி 3. பாரதிமணி 4. கே எஸ் சுப்பிரமணியன் 5. நடிகர் நாசர் 6. பாலகுமாரன் 7. அம்ஷன்குமார் 8. திலகவதி 9. திலீப் குமார் 10. ஞாநி
11. பத்மா 12. சாருநிவேதிதா 13. எஸ் ராமகிருஷ்ணன் 14. திருப்பூர் கிருஷ்ணன் 15. மனுஷ்யப்புத்திரன் 16. இளையபாரதி 17. இரா.தெ.முத்து 18. சிகரம் ச. செந்தில்நாதன் 19. இரா முருகன் 20. பாரவி 21. சுகுமாரன் 22. வெளி ரங்கராஜன் 23. வேடியப்பன் 24. கிருஷாங்கினி 25. லதா ராமகிருஷ்ணன் 26. ஷங்கர ராம சுப்பிரமணியன் 27. நடிகை ரோகிணி 

மேலும் அசோகமித்திரன் குடும்பத்தில் யாராவது ஒருவரைப் பேச அழைக்க உள்ளோம்.


இக் கூட்டத்தை அழகியசிங்கர், ஸ்ரீகுமார், பெருந்தேவி ஏற்பாடு செய்கிறோம்.

Comments

Popular posts from this blog