Skip to main content

எதையாவது சொல்லட்டுமா....4





3வது இலக்கியக் கூட்டம் 18.10.2009 அன்று வழக்கம்போல் எல்எல்ஏ பில்டிங்கில் நடந்தது. இந்த முறை அஜயன்பாலாவும், தமிழ்மணவாளனும் கலந்துகொண்டார்கள்.

சினிமாவைப்பற்றிய அனுபவத்தை அஜயன்பாலா பகிர்ந்துகொண்டார்.

எல்லோருக்கும் போன் ஒரு முறை செய்வது. பின் இன்னொருமுறை போன் செய்வது. இதுதான் கூட்டம் நடத்தும் முறை. பத்திரிகையிலோ வேறு எங்கேவோ விளம்பரம் கிடையாது.

அஜயன்பாலா சினிமாவைப் பற்றிய தன் அனுபவத்தைப் பேசினார். எனக்குப் பல ஆண்டுகளாக அஜயன்பாலாவைத் தெரியும். அவர் ஒரு பிடிவாதக்காரர். சினிமாவில் தன் தடத்தைப் பதிய வைக்கவேண்டுமென்ற வைராக்கியம் மிக்கவர். இதற்காக பல இன்னல்களை அவர் ஏற்றுக் கொண்டிருக்கிறார். சினிமாவை விட அவரை அதிகமாகக் கவர்வது சிறுகதை எழுதுவதுதானாம். இதைக் கேட்கும்போது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. அவர் முதல் சிறுகதை நவீன விருட்சத்தில்தான் வந்தது. ஒரு உதவி டைரக்டராக சினிமாவில் நுழைய அவர் பட்ட சிரமங்களை சுவாரசியமாகப் பேசினார். எனக்கு அதைக் கேட்க கேட்க ஆச்சரியமாக இருந்தது. வேலைக்குக் கட்டாயம் போகக்கூடாதென்று முடிவெடுத்து, டிகிரி சர்டிபிக்கேட்டை போய் வாங்கக்கூட இல்லையாம். வாங்கினால் வேலை கொடுக்கும் அலுவலகத்தில் போய் பெயர் பதிவு செய்ய வீட்டிலுள்ளவர்கள் தொந்தரவு செய்வார்கள் என்ற அச்சம் அவருக்கு;. அவர் சில படங்களில் நடிக்கவும் செய்திருக்கிறார். சில படங்களில் உதவி இயக்குனராகவும் இருந்திருக்கிறார். ஒரு படம் அவரே டைரக்ட் செய்ய வாய்ப்பு இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். உலகத் தரத்திற்கு தமிழ் படங்களை உயர்த்த வேண்டுமென்ற அசையாத நம்பிக்கை வைத்திரு;கிறார்.. அவர் முயற்சிக்கு வாழ்த்துகள்

தமிழ் மணவாளன் நீண்ட கட்டுரை ஒன்றை எடுத்து வாசிப்பார் என்று எதிர்பார்க்கவில்லை. கவிதையை அவர் எப்படிப் புரிந்து கொண்டாரோ அதை தாளில் எழுதி உள்ளார். அதை அப்படியே வாசித்தார். கவிதையைக் குறித்து அவர் புரிந்துகொண்ட விதமாகவும் ஒட்டுமொத்த கட்டுரையாகவும் அது தோன்றியது. அவர் படித்த விஷயத்தைப் பார்த்தவுடன், எனக்கும் அதுமாதிரி ஒன்றை தயாரித்து வைத்துக்கொள்ள வேண்டுமென்று தோன்றியது.
கவிதை எழுதும் ஒவ்வொருவரும் கவிதையைக் குறித்து என்ன நினைக்கிறார்கள் என்பதை ஒரு தாளில் பதிவு செய்து கொள்வது நல்லது. எதை அவர் கவிதையாக நம்புகிறார் என்பது முக்கியம்.

கவிதையைக் குறித்து உரையாடும் போது பிரம்மராஜன், ஜெயபாஸ்கரன், சுகுமாரன் கவிதைகள் குறித்து பேச்சு திரும்பியது. லாவண்யா,"நான் பிரம்மராஜன் கவிதை ஒன்றை 50 தடவைகள் படித்தேன். அதன்பின்தான் புரிந்தது," என்றார். உடனே அது குறித்து பலத்த ஆட்சேபணை எழுந்தது. விஜய மகேந்திரன், "லாவண்யாவே இப்படி சொல்வது ஆச்சரியமாக இருக்கிறது,"என்றார்.

அக் கூட்டத்தில் ஆச்சரியம். சுவாமிநாதன் என்பவர். இவரை இனி சுவாமிநாதன் என்று குறிப்பிடுகிறார்கள். அவர் பல விஷயங்களைக் குறித்து ஆழமான கருத்துக்களை வைத்திருக்கிறார். அஜயன் பாலாவின் முயற்சிக்கு வாழ்த்துத் தெரிவித்தார். சினிமா படங்களைப் பற்றி ஆழமான அறிவை வைத்திருக்கிறார். சின்ன சின்ன நாடுகளெல்லாம் 5 படங்கள் தயாரித்தாலும், எல்லோரும் பேசும்படி செய்துவிடுகிறார்கள். தமிழில் அது சாத்தியமே இல்லை என்றார். ஆனாலும் அஜயன் பாலா ஒரு இளைஞர். அந்தக் கனவோடு இருக்கும் அவருக்கு வாழ்த்துகள் என்றார்.

அந்தக் காலத்தில் இதெல்லாம் ஒரு இயக்கமாக இருந்தது. சினிமாவுக்கென்று, நாடகத்திற்கென்று, பத்திரிகைக்கென்று. ஆனால் இதெல்லாம் இப்போது சாத்தியம் இல்லாமல் போய்விட்டது என்றார் பாரவி. தவறாமல் கூட்டத்தில் கலந்துகொள்ளும் தேவகோட்டை வா மூர்த்தி, பாரவி, எஸ். சுவாமிநாதனைப் பாராட்டாமல் இருக்க முடிவில்லை.

கூட்டத்தில் பேசியதை டேப்பில் பதிவு செய்திருக்கிறேன். கேட்டால் நன்றாகவே இருக்கும்.

Comments

// கவிதை எழுதும் ஒவ்வொருவரும் கவிதையைக் குறித்து என்ன நினைக்கிறார்கள் என்பதை ஒரு தாளில் பதிவு செய்து கொள்வது நல்லது. எதை அவர் கவிதையாக நம்புகிறார் என்பது முக்கியம். //

இது முக்கியமா?