Skip to main content

மனதுக்குப் பிடித்த கவிதைகள் - 89


அழகியசிங்கர்  



அழகியல்



கி பி அரவிந்தன்





நாரினில் பூத்தொடுக்க
மாலை வரும்.

மாலையில் பூவுதிர
நாரிழை எஞ்சும்

நாரினைக் கடைவிரித்தால்
கொள்வாரும் உளரோ

தேடிப் பலவண்ணத்தில்
பூக்கொய்யலாம்

நாரின்றேல்...!

என்னிடத்தே நாருண்டு
எப்பூவையும் நான் தொடுப்பேன்
ஆனால் அது
பூக்களை விற்பதற்கல்ல...


நன்றி : கனவின் மீதி - கி பி அரவிந்தன் - பக்கம் : 96 - விலை : ரூ.40 - பொன்னி, 29 கண்ணகி தெரு, மடிப்பாக்கம், சென்னை 600 091 வெளியான ஆண்டு : ஆகஸ்ட் 1999

Comments