Skip to main content

பத்து கேள்விகள் பத்து பதில்கள் - 19 - ஏ எஸ் நடராஜன் பேட்டி


அழகியசிங்கர்




1978ஆம் ஆண்டிலிருந்து எனக்கு நண்பர் அவர்.  பெயர் ஏ எஸ் நடராஜன்.  சுறுசுறுப்பானவர்.  வாழ்க்கையை அவர் பார்க்கும் விதம் வித்தியாசமாக இருக்கும்.  மிகச் சாதாரண நிலையிலிருந்து தன் அறிவாற்றலால் முன்னுக்கு வந்தவர்.  அவரும் நானும் பரீக்ஷா ஞாநி இயற்றிய  மூர் மார்க்கெட் என்ற நாடகத்தில் ஒன்றாக நடித்தோம். அவருக்குத் துணிச்சலான கதாப்பாத்திரம்.  எனக்கோ பயந்தாகொள்ளி கதாப்பாத்திரம். 
15ஆம் தேதி ஏப்ரல் மாதம் 1995ஆம் ஆண்டு காரில் சென்று கொண்டிருந்தபோது  விபரீதமான விபத்தில் சிக்கிக்கொண்டு, அவருக்கு முதுகு தண்டுவடம் உடைந்து விட்டது.   அந்தக் கோரமான விபத்திலிருந்து உயிர்பெற்று மீண்ட நடராஜன் த்ன வாழ்க்கையைப் பற்றிய தன் அனுபவங்களை என்னுடன் இன்று பகிர்ந்து உள்ளார்.   அவருடைய வாழ்க்கை அனுபவம் ஒவ்வொருவருக்கும் வாழ வேண்டுமென்ற தூண்டுதலை ஏற்படுத்தும். 




Comments