அழகியசிங்கர்
 நேற்று முதல் பகுதி வெளியிட்டிருந்தேன்.  இப்போது இரண்டாம் பகுதி வெளியிடுகிறேன்.
 நான் தற்செயலாக எதிரி உங்கள் நண்பன் புத்தகத்தைக் கொடுக்கத்தான் கே கே நகரில் உள்ள நடராஜன் வீட்டிற்குச் சென்றேன்.  என்னமோ தோன்றியது ஒரு பேட்டி எடுக்க வேண்டும் என்று. நடராஜனும் அதற்கு சம்மதிக்கவே பேட்டி எடுத்து விட்டேன். 
 ரொம்ப மோசமான ஒரு விபத்திலிருந்து தப்பித்து பின் எப்படி அதை எதிர்கொள்வது என்பதை நடராஜனிடமிருந்து பலரும் கற்றுக்கொள்ள வேண்டும். 
 இந்த விபத்து நடந்து பல ஆண்டுகளுக்குப் பிறகு நடராஜன் தனியாக தானே வாழ பழகிக்கொண்டவர்.  கால்களைப் பயன்படுத்தாமல் கைகளைக்கொண்டு காரை எடுத்துக்கொண்டு எல்லா இடங்களுக்கும் செல்லக் கூடியவர்.  அவர் துணிச்சல் யாருக்கும் வராது.  நீங்கள் இந்தப் பேட்டியின் இன்னொரு பகுதியையும் பார்க்க வேண்டும். 
Comments