Skip to main content

துளி : 4 - ராகவன் காலனி மூன்றாவது தெருவில் இருக்கும் கிளை நூலகம்.

..

அழகியசிங்கர்







2015ஆம் ஆண்டு வெள்ளம் வந்தபோது நூலகங்களைக் காப்பாற்ற முடியவில்லை. ராகவன் காலனி மூன்றாவது தெருவில் இருக்கும் நூலகம் அப்படிப்பட்ட ஒன்று. நூலகரின் புத்திசாலித்தனத்தால் பல நூல்கள் காப்பாற்றப்பட்டு விட்டன. இப்போது திரும்பவும் பல புத்தகங்களைத் தருவித்து நூலகத்திற்கு உயிர் கொடுத்திருக்கிறார் நூலகர். இந்த நூலகத்தில்தான் நாங்கள் இலக்கியக் கூட்டம் நடத்திக்கொண்டு வருகிறோம். ஒவ்வொரு மாதமும் கடைசி வியாழக்கிழமை. வரும் வியாழக்கிழமை கூடும் கூட்டம் நாலாவது கூட்டம்.
நூலகரின் வேண்டுகோளுக்கு இணங்க நூலகத்தின் வெளிப்புறத்தில் சுண்ணாம்பு அடித்தோம். எல்லாம் நான் மட்டும் காரணம் அல்ல. பத்து நண்பர்கள் ஒத்துழைப்புடன் நடந்த நிகழ்ச்சி. ரூ.10000 வரை செலவு. இன்னும் நூலகத்தின் வாசலில் தமிழில் வாசகங்கள் எழுத வேண்டும். நூல்கள் விரும்பிப் படிக்கத் தூண்டும்விதமாக வாசகங்கள் தேவை. எழுதி அனுப்பும்படி கேட்டுக்கொள்கிறேன்.

Comments