Skip to main content

என்னவென்று சொல்வது?..


அழகியசிங்கர்








நேற்று விருட்சம் கவிதை வாசிக்கும் கூட்டம் சூமில் நடத்தினேன்.  எனக்குத் திருப்தியாக இல்லை.  நேற்று கவிதை வாசித்தவர்களை தனித்தனியாகக் கூப்பிட்டு இன்னொரு முறை வாசிக்க வைக்கவேண்டுமென்று நினைக்கிறேன்.

இன்னும் எனக்கு சூம் கூட்டம் நடத்துகிற அனுபவம் போதவில்லை.  ஒவ்வொரு வெள்ளிக்கிழமை தோறும் சூம் கூட்டம் கவிதை வாசிக்கும் கூட்டமாக நடத்த உத்தேசம். எனக்கு அறிமுகமான கவிஞர்களையெல்லாம்  கூப்பிட்டு வாசிக்கச் சொல்லப் போகிறேன்..

ஒவ்வொரு வாரமும் 4 கவிஞர்களைக் கூப்பிட்டுக் கவிதை வாசிக்கச் சொல்லலாமென்று நினைக்கிறேன்.  ஒரு வாரம் மரபுக் கவிதைகள் எழுதுபவர்களைக் கூப்பிடலாமென்று நினைக்கிறேன் (அப்படி என்னதான் எழுத முடிகிறது அவர்களால்?)  அதேபோல் ஐகூ வாசிப்பவர்களை.

நான் 32 வருடமாக விருட்சம் நடத்தி வருகிறேன்.  கவிஞர்கள்தான் பெரும்பாலும் அறிமுகம் எனக்கு.  தேங்கிவிட்ட கவிதைப் புத்தகங்களை என்ன செய்வது என்று எனக்கு எப்போதும் தெரியாது?  கவலைப் படுவதுமில்லை. பேப்பர் கடைகளிலும் போடுவதில்லை.

வரும் வெள்ளிக்கிழமை 4 பெண் கவிஞர்களைக் கவிதை வாசிக்க அழைக்கலாமென்று நினைக்கிறேன்.  கூட்டத்தை 40 நிமிடங்களில் முடித்துவிடலாமென்று நினைக்கிறேன்  ஒவ்வொருவருக்கும் கவிதை வாசிக்க 9 நிமிடங்கள்.  கவிஞர்களை நானே அறிமுகப் படுத்தலாமென்று நினைக்கிறேன். எல்லாக் கவிஞர்களையும் முறை வைத்து கவிதை வாசிக்கக் கூப்பிட உள்ளேன். யாரையும் தவிர்க்கும் எண்ணமில்லை.

ஏற்கனவே கவிதைக்கணம் என்ற அமைப்பை நண்பர்களுடன் சேர்ந்த நடத்திய  அனுபவம் எனக்குண்டு.  சிபிச்சல்வன், லதா ராமகிருஷ்ணன், பூமா ஈஸ்வர மூர்த்தி, நான் என்றெல்லாம்  கூடி நடத்தியிருக்கிறோம்  மூத்தக் கவிஞர்களுக்குப் பரிசு கொடுத்திருக்கிறோம். 

திரும்பவும் இப்போது ஆரம்பித்திருக்கிறேன்.  எல்லோரும் இந்த சூம் கூட்டத்தில் கலந்து கொண்டு இந்த எளியோனுக்கு ஆதரவு தர வேண்டுகிறேன்.

இந்த விஷயத்தில் உங்கள் அறிவுரைகளையும் ஏற்க விரும்புகிறேன்.

Comments

Popular posts from this blog