Skip to main content

சஞ்சாரம் நாவலுக்குக் கிடைத்தப் பரிசு

சஞ்சாரம் நாவலுக்குக் கிடைத்தப் பரிசு


அழகியசிங்கர் 




எஸ்ராமகிருஷ்ணனின் சஞ்சாரம் என்ற நாவல்தான் சாகித்திய அக்காதெமி பரிசுப் பெற உதவியது.  நீங்களும் படிக்கலாம் என்ற பெயரில் நான் ஒரு புத்தகம் கொண்டு வந்தேன். ஏப்ரல் 2016ல் கொண்டு வந்தப் புத்தகம் அது.   21 புத்தகங்கள் பற்றி 3000 பக்கங்கள் படித்துவிட்டு எழுதிய புத்தகம்.
நான் முதன் முதலாகச் 'சஞ்சாரம்' என்ற ராமகிருஷ்ணன் புத்தகத்துடன்தான் 'நீங்களும் படிக்கலாம்' என்ற புத்தகம் ஆரம்பித்தேன்.  2015ல் இந்த நாவலைப் படித்துவிட்டு எழுதினேன்.
நாதஸ்வரம் என்ற இசைக் கருவியை முன்வைத்து நாதஸ்வர கலைஞர்களின் வாழ்க்கையைப் பற்றி விவரிக்கும் நாவல் என்று தோன்றியது.  பல உபகதைகள் என்று படிக்கப் படிக்க ஒரு திரில்லர் நாவலைப் படிப்பதுபோல் போகும் இந்த நாவல்.  இப்போது நான் திரும்பவும் எடுத்து வாசிக்கத் தொடங்கியிருக்கிறேன்.   கதைசொல்லியான எஸ் ராமகிருஷ்ணனுக்கு என் வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

Comments

Popular posts from this blog