Skip to main content

துளி : 24 - நான் எப்படியோ ஐந்து படங்களைப் பார்த்துவிட்டேன்


அழகியசிங்கர்




டிசம்பர் மாதம் மோசமான மாதம்   ஜனவரி மாதம் நடக்க இருக்கும் புத்தகக் கண்காட்சியை ஒட்டி புத்தகங்கள் தயாரிக்க வேண்டும்.  புத்தகங்களைத் தயாரித்துக் கொண்டிருக்கும் சமயத்தில் 16வது சென்னை உலகத் திரைப்பட விழா 13ஆம் தேதியிலிருந்து 20ஆம் தேதிவரை.   இதைத் தவிர இசைக் கச்சேரிகள் பல சபாக்களில்.  
நான் இந்த முறை ஐந்து படங்களைப் பார்த்துவிட்டேன்.  மாலை நேரத்தில் குளிர் தாங்க முடியாமல் இருந்ததால் பகல் நேரங்களில் சென்று கொண்டிருந்தேன்.  
இரண்டாண்டுகளுக்கு முன் சென்னை உலகத் திரைப் பட விழாவில் நான் பார்த்த படங்கள் எனக்கு மிகவும் திருப்தியைக் கொடுத்தன.  ஆனால் போன ஆண்டு அந்த அளவிற்கு திருப்தியைத் தரவில்லை.  பல படங்களில் பாதியை மட்டும் பார்த்துவிட்டு வந்துவிடுவேன்.
ஆனால் இந்த முறை நான் பார்த்தப் படங்கள் எல்லாம் எனக்குத் திருப்தியை மட்டுமல்ல, இன்னும் சினிமாப் படங்கள் பார்க்கவேண்டுமென்ற ஆர்வத்தையும் தூண்டியது.  ஒவ்வொரு படமும் ஒவ்வொரு விதமாக எனக்குத் தெரிந்தது.  முதலில் டுர்கிப் படம் ஒன்றைப் பார்த்தேன்.  படம் பெயர் தி ஒயில்டு பியர் டீரி. சிலான் என்பவர் இயக்கியப் படம்.
எழுத்தாளராக வர வேண்டுமென்று சினான் நினைக்கிறார். அவர் இளைஞர்.  அவர் வசித்த கிராமத்திற்கே வருகிறார்.  அங்கு பலரைச் சந்திக்கிறார்.  அவர் கட்டுரைகளை எல்லாம் சேர்த்து புத்தகமாகக் கொண்டு வருகிறார்.  ஆனால் அவர் வீட்டிலேயே அவர் புத்தகத்தை அவருடைய அம்மாவும் தங்கையும் படிக்கத் தயாராய் இல்லை.  ஒரு நூல்நிலையத்தில் புகழ்பெற்ற எழுத்தாளரைச் சந்திக்கிறார்.  அவருடைய அறிவுரையைப் பெறுவதற்குப் பதில் அவருடன் சண்டைப் போடும்படி ஆகிவிடுகிறது.   
சினிமாப் படம் முழுவதும் ஒரே பேச்சு.  எல்லோரும் பேசிக்கொண்டே இருக்கிறார்கள்.  ஆனால் இந்தப் படம் பார்ப்பதற்கு அலுப்பாகவே இல்லை. 
இன்னொரு படம் ஹ÷யுமன், ஸ்பேஸ், டைம் அன்ட் ஹ÷யுமன்.  கொஞ்சங்கூட கற்பனையே செய்ய முடியாத படம். உணவுக்காக ஒருவரை ஒருவர் வெட்டிச் சாய்க்கிறார்கள். எந்த அளவிற்கு மோசமாக நடந்து கொள்வார்களோ அந்த அளவிற்கு மோசமாக நடந்து கொள்வார்கள்.  கி டக் கிம் இயக்கியப் படம்.   கப்பலில் நடைபெறும் கொடுரமான காட்சிகள் கொண்ட படம். இது ஒரு கொரியா படம்.  
பெயின்டிங் லைப் என்ற படம் பார்த்தேன்.  டாக்டர் பிஜ÷ குமார் தாமோதரன் இயக்கியப் படம்.  ஒரு வரத்தகப்படத்திற்கு நடனத்தையும் பாட்டையும் படம் பிடிக்க சினிமாப்படக் குழு இயற்கை காட்சி நிறைந்த ஒரு இடத்திற்கு வருகிறார்கள்.  நினைத்துப் பார்க்கவே முடியாத இடம்.  எதிர்பாராதவிதமாகப் பெய்யும் மழையால் எங்கும் போக முடியாமல் படப்பிடிப்புக் குழுவினர் மாட்டிக்கொண்டு விடுகிறார்கள்.  வெளி உலகத் தொடர்பே இல்லாத இடம்.  அந்த இடத்தில் படக்குழுவினர் படும் அவதிதான் படம்.  படத்தை இயக்குவதற்காக வந்திருக்கும் இளைஞர் வெளி உலகத்துடன் தொடர்பு இல்லாத அந்தக் கிராமத்தைப் பார்த்து பாட்டுக் காட்சியைப் படமே எடுக்க வேண்டாமென்று போய்விடுகிறார்.  நான் ரசித்தப் 3வது படம். 
மோகன் ராஜா இயக்கிய வேலைக்காரன் என்ற தமிழ்படம் பார்த்தேன்.  சிவ கார்த்திகேயன் நடித்தப் படம்.  ஏற்கனவே இந்தப் படத்தைப் பார்த்து ரசித்தவன்.  திரும்பவும் இந்தப் படத்தை இன்னொரு முறை ரசித்தேன்.  பொழுது போக்குப் படமாக இல்லாமல் கலப்பட உணவு எப்படி மக்களைப் பாதிக்கிறது என்று விளக்குகிற படம்.  அலுப்புத் தட்டாமல் பார்த்து ரசித்தப் படம்.
கடைசியாக விஷன் என்ற பிரான்சு தேசத்துப் படத்தைப் பார்த்து ரசித்தேன். விஷன் என்ற பெயரில் உள்ள அரிதான மருத்துவ மூலிகைச் செடியைத் தேடி ஜன்னி என்பவள் ஜப்பான் நாட்டில் உள்ள காட்டிற்கு வருகிறாள்.  டோமோ என்கிற காட்டுப் பகுதியில் பணிபுரிகிறவனைச் சந்திக்கிறார்.  மருத்துவச் செடியைக் கண்டுபிடிப்பதற்குப் பதில் அவளைக் கண்டுபிடிக்கும் இடமாக மாறி விடுகிறது.  நோமி கவாஸ் தயாரித்து இயக்கியப் படம்.  
தாமதமாக இப் படங்களைப் பற்றி எழுதுகிறேன்.  ஒவ்வொரு படத்திலும் நான் பார்த்த சிறப்புக் காட்சிகளை திறமையாக எழுத முடியவில்லை.  இந்தப் படங்களைப் பற்றி சொல்லும்போது ஒரு பார்வையாளனாக ஒரு படத்தை முழுவதுமாக உணர முடியுமா என்பதை என்னால் கணிக்க மடியவில்லை. 
புத்தகத் தயாரிப்பு தருணத்தில் இப் படங்களைப் பார்த்தேன்.  புத்தகங்களையும் தயாரித்துவிட்டேன்.  இûச்க் கச்சேரிக்குத்தான் போக முடியவில்லை.  எங்கள் வீட்டிற்குப் பக்கத்தில் இன்று நடைபெற விருக்கும் நித்யஸ்ரீ கச்சேரிக்குப் போக நினைக்கிறேன்.   

Comments