Skip to main content

திருக்குறள் சிந்தனை 9


அழகியசிங்கர்



நான் சிலருடைய புத்தகங்களை வாங்கி வைத்துக்கொள்வேன். படிக்கிறேனோ இல்லையோ புத்தகங்களை வைத்துக்கொண்டிருப்பேன்.  யார்யார் புத்தகங்களை அப்படி வாங்கி வைத்துக்கொள்வேன் என்பதை பட்டியிலிட விரும்புகிறேன்.  1. காந்தியைப் பற்றிய புத்தகங்கள் 2. பாரதியார் குறித்து எழுதப்படுகிற புத்தகங்கள் அல்லது பாரதியார் புத்தகங்கள் 3. ஜே கிருஷ்ணமூர்த்தி புத்தகங்கள் 4. பெரியார் புத்தகங்கள் 5. ரமணர் புத்தகங்கள் 6.  திருக்குறள் புத்தகங்கள்.  திருக்குறள் புத்தகங்களைக் கண்ணால் கண்டால் வாங்கி வைத்துக்கொள்வேன்.  ஆனால் புரட்டிக்கூடப் பார்க்க மாட்டேன்.  ஆனால் இன்று வரை என் வாழ்க்கையில் ஒரு குறளை நான் விடாமல் பின்பற்றிக்கொண்டு வருகிறேன்.  சமீபத்தில் திருக்குறளைப் பற்றி ஒரு கூட்டம் நடத்தினேன்.  என் மனநிலையில் பெரிய மாற்றம் ஏற்பட்டு விட்டது.  தினமும் ஒரு குறளை எப்படியாவது படித்துப் பார்ப்பது என்று.

இதோ இன்றைய குறள்.

கோளில் பொறியில் குணமிலவே எண்குணத்தான்
தாளை வணங்காத் தலை. 

எல்லா நல்ல குணங்களும் வல்லமைகளும் உள்ளவனாகிய இறைவனை உணர்ந்து அவனை வணங்காத மனிதனுடைய மூளை எந்த சிந்தனைச் சக்தியும் இல்லாமல் போய்விடும்.
திருக்குறளில் கடைசி வரியை எப்போதும் மறக்க முடியாது.  தாளை வணங்காத் தலையையும் மறக்க முடியாது.+


Comments

Popular posts from this blog