Skip to main content

திருக்குறள் சிந்தனை 6

அழகியசிங்கர்



கடவுள் வாழ்த்து என்ற பெயரில் 10 குறள்கள் எழுதி உள்ளார்.  ஒவ்வொரு குறளையும் ஒவ்வொரு விதமாக கட்டமைத்துள்ளார்.  இதோ இந்தக் குறளைப் பார்ப்போம்.

பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க 
நெறிநின்றார் நீடுவாழ் வார்.

ஐம்பொறிகள் வாயிலாகச் செயல்படும் ஐம்புலன்களையும் நம் கட்டுக்குள் கொண்டு வந்தால் மெய்யான ஒழுக்க நெறியில் நாம் வாழலாம் என்கிறார் திருவள்ளுவர்.  இந்த ஐம்பொறிகளையும் கட்டுக்குள் கொண்டு வருபவர் கடவுள்தான்.  நாம் நீண்ட ஆயுளுடன் வாழ இந்த நெறி அவசியம் என்கிறார். 

நெறிநின்றார் நீடுவாழ் வார் என்ற வரி பிடித்திருக்கிறது.   ஐம்புவன்களான மெய், வாய், கண், மூக்கு, செவியைக் கட்டுக்குள் கொண்டு வருதல் என்றால் என்ன?  நம் கட்டுக்குள் இவை அடங்கி வருமா என்பது புரியவில்லை.  இந்தக் குறள் நம்மை யோசிக்க வைக்கிறது.   ஒருவிதத்தில் இக்குறள் மருத்துவக் கருத்தாகவும் இருக்கும்போல் தோன்றுகிறது. 

Comments