16.6.11

சுயநலம்

அதிகமாய் பேசுகிறேனோ
அடிக்கடி
சந்தேகம் வருகிறது


பேசாமல் இருப்பதே உசிதம்
சமயத்தில்
தோன்றதான் செய்கிறது


கேட்பவர் முகங்களில்
தெரிகிற சோர்வைக் கண்டு கொள்ளாமல்
தொடர விழைகிற மனதின் மேல்
கோபம் கூட வருகிறது


பேசுவதை நிறுத்தி விடலாமெனப்
பொறுப்புணர்வுடன்
தீர்மானிக்கப் போகையில்..
யாருக்காகப் பேசுகிறேன் எனும்
கேள்வி எழ,


புரிய வந்தது
இதுகாலமும் பேசிய யாவும்
எனக்காகவே என்று.


ஒத்தி வைக்கப்பட்டது
காலவரையரையின்றி தீர்மானம்.
*** ***

2 கருத்துக்கள்:

குமரி எஸ். நீலகண்டன் said...

நல்ல கவிதை... நிரந்தரமற்ற சில தீர்மானங்கள் மீண்டும் மீண்டும் மீண்டும் நாம் எடுத்துக் கொண்டு இருப்பவைதான்...நம் பேச்சில் பிறர்நலமும் இருக்கத்தானே செய்கிறது...

ராமலக்ஷ்மி said...

மிக்க நன்றி நீலகண்டன்:)! பிறர் நலம் இருப்பதாக நாம் எண்ணுகிறோம். ஆனால் பிறர்..?