Skip to main content

பசுவும் நிலாவும்

பௌர்ணமி இரவின்

பரந்த வெளியில்

கொட்டகைத் தொட்டியில்

கொட்டிய கழனியை

சப்பி சப்பி

குடித்தது பசு.


நிலா மிதந்த

கழனியை மென்று

மென்று சுவைத்தது.

மிகுந்த சுவையாய்

இருந்ததாய் சிலாகித்தது.


மெல்ல மெல்ல

வாய்க்கு பிடிபடாமல்

தொட்டியில் எஞ்சிய

கழனியிலேயே கொஞ்சி

விளையாடியது நிலா.


கன்று வாய் வைத்ததும்

காணாமல் நிலா போக

பசு கன்றைப்

பார்த்தது சந்தேகமாக

Comments

Popular posts from this blog