Skip to main content

சில நேரங்களில்

சில நேரங்களில் ஒரு கவிதையில்

சொல்லப் பட்டதுடன் சொல்ல விழையாதது

நுழைந்து விடுகிறது ஒரு எடுப்பான நிறத்தோடு

ஒளிந்து விளையாடும் விளையாட்டு
மறைந்திருப்பவரைக் கண்டுபிடித்ததும்

முற்றுப் பெறுகிறது - சிறிது நேரம்.
சீருடையில் ஒரு முகமும்

தனியுடையில் ஒரு முகமுமென
அடையாளமணியும் சொற்கள்...
சிறகென்றெழுதிய கணத்தில் மிதந்தவை

தமிழின் இறகில் இருந்து பிரிந்த சிறகொன்றும்

லெபனானின் முறிந்த சிறகுகளும் மட்டும

பறவை என்றெழுதிய போதே பார்வையில்
அவசர வண்ணங்கள் தீற்றப் பெற்றால்

தாளின் வெண்மையில் கரைந்திருக்கும் பறவைகள்
காணா ஆழத்தில் அமிழ்ந்து தடமறுக்கும்
கருப்பும் வெள்ளையும் தவிர்த்த நிறங்களிலும்
பூக்கத்தான் செய்கின்றன பூக்கள் எங்கும்.
-

Comments

நன்றி திரு.குமரி.எஸ்.நீலகண்டன்.
கவிதையில் வரிகளின் அமைப்பு மாறிவிட்டது. சிறகுகளும் மட்டுமா என்றிருக்க வேண்டும். மன்னிக்கவும்.

Popular posts from this blog